அரசாங்கம் அனுமதி வழங்கியதும் செங்கடலிற்கு கப்பலை அனுப்ப இலங்கை கடற்படை தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது குறித்து இன்னமும் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றதுடன்,
எந்தநேரத்திலும் கப்பலை அனுப்ப தயாராகவுள்ளோம் எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
மேலும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் கடற்படை தளபதி உட்பட்டவர்களிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது