இந்தியாவில் இருந்து சாலை வழியாக லும்பினிக்கு பயணித்த 73 இலங்கை யாத்ரீகர்கள் குழு தற்போது நேபாளத்தை விட்டு வெளியேற இந்தியா - நேபாள எல்லையில் உள்ளது.
நேபாளத்தின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்று வரும் போராட்டம் தற்போது எல்லைமீறி கலவரபூமியாகியுள்ளது.
நேபாள பிரதமர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பதவி விலகும் அளவிற்கும் மக்களிடம் துரத்தி துரத்தி தாக்குதலுக்குள்ளாகும் வகையில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையிலேயே நேபாளத்தில் போராட்டம் வலுப்பெறலாம் என எண்ணி நேபாளத்தில் உள்ள இலங்கையர்களை மீட்க இலங்கை வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
நேபாள குடியேற்ற அதிகாரிகளுடன் இலங்கை தூதரக அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு, அவர்களின் அமைப்பு செயல்படாததால், நடைமுறைகளை விரைவுபடுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா - நேபாள எல்லையில் உள்ள இலங்கை யாத்திரீகர் குழு; கலவரத்தையடுத்து நாடு திரும்ப நடவடிக்கை இந்தியாவில் இருந்து சாலை வழியாக லும்பினிக்கு பயணித்த 73 இலங்கை யாத்ரீகர்கள் குழு தற்போது நேபாளத்தை விட்டு வெளியேற இந்தியா - நேபாள எல்லையில் உள்ளது.நேபாளத்தின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடம்பெற்று வரும் போராட்டம் தற்போது எல்லைமீறி கலவரபூமியாகியுள்ளது. நேபாள பிரதமர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் பதவி விலகும் அளவிற்கும் மக்களிடம் துரத்தி துரத்தி தாக்குதலுக்குள்ளாகும் வகையில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.இந்த நிலையிலேயே நேபாளத்தில் போராட்டம் வலுப்பெறலாம் என எண்ணி நேபாளத்தில் உள்ள இலங்கையர்களை மீட்க இலங்கை வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. நேபாள குடியேற்ற அதிகாரிகளுடன் இலங்கை தூதரக அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு, அவர்களின் அமைப்பு செயல்படாததால், நடைமுறைகளை விரைவுபடுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.