தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதயதாகத் தெரிவித்து 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மேலும் சில
மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் கடலில் தவிப்பதாகவும் இந்திய மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்
இது தொடர்பில் இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கையில்
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை அதிவேக படகில் வேகமாக வந்த 6 பேர் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தடுத்து நிறுத்தி கத்திமுனையில் தாக்குதலை நடத்தினர்.
ஆயுதங்களால் தாக்கி மீனவர்களிடம் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதேபோல அடுத்தடுத்து சுற்றி வளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள் செருதூர் கிராமத்தை சேர்ந்த 7 மீனவர்கள், வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
காயமடைந்த 17 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரசுக் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் படுகாயமடைந்த மீனவர்கள் கடற்கொள்ளையர்களிடம் உடமைகளை இழந்து கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை அதிவேக படகில் வந்து சுற்றிவளைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இரும்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கிதாகவும் காயமடைந்த மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டுமென படுகாயமடைந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதயதாகத் தெரிவித்து 17 இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் மேலும் சிலமீனவர்கள் கரை திரும்ப முடியாமல் கடலில் தவிப்பதாகவும் இந்திய மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்இது தொடர்பில் இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கையில்நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை அதிவேக படகில் வேகமாக வந்த 6 பேர் கொண்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் தடுத்து நிறுத்தி கத்திமுனையில் தாக்குதலை நடத்தினர். ஆயுதங்களால் தாக்கி மீனவர்களிடம் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, மீன்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதேபோல அடுத்தடுத்து சுற்றி வளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள் செருதூர் கிராமத்தை சேர்ந்த 7 மீனவர்கள், வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த 5 மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர். காயமடைந்த 17 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரசுக் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் படுகாயமடைந்த மீனவர்கள் கடற்கொள்ளையர்களிடம் உடமைகளை இழந்து கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை அதிவேக படகில் வந்து சுற்றிவளைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இரும்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கிதாகவும் காயமடைந்த மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே இந்திய மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டுமென படுகாயமடைந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.