தமிழக மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தின் நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே புதுப்பேட்டையைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன் பிடியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த பகுதிக்கு படகில் வந்த மூன்று இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை மிரட்டியும், தாக்குதல் நடத்தியும் மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள் உள்ளிட்ட ஒரு இலட்சம் பெறுமதிமிக்க மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழக மீனவர்கள் இருவர் படு காயமடைந்நத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்கொள்ளையர்கள்; மௌனம் காக்கும் இலங்கை samugammedia தமிழக மீனவர்களை தாக்கி மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தமிழகத்தின் நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே புதுப்பேட்டையைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன் பிடியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர்.இதன் போது குறித்த பகுதிக்கு படகில் வந்த மூன்று இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை மிரட்டியும், தாக்குதல் நடத்தியும் மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள் உள்ளிட்ட ஒரு இலட்சம் பெறுமதிமிக்க மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழக மீனவர்கள் இருவர் படு காயமடைந்நத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.