இந்நியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரி கம பா நிகழ்ச்சியில் நுவரெலியா மாவட்டம் பெல்மோரல் பகுதியைச் சேர்ந்த யுவதியான சினேகா என்பவரும் தெரிவாகியுள்ளார்.
சரிகமப லிட்டில் சேம்ஸ் நிறைவடைந்த நிலையில், தற்போது சீனியர் சீசன் 5க்கான மெகா ஆடிசன் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சரிகமப நிகழ்ச்சின் மெகா ஒடிஷன் ப்ரொமோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில், நுவரெலியா மாவட்டம் பெல்மோரல் பகுதியைச் சேர்ந்த யுவதி சினேகாவும் தெரிவாகியுள்ளார்.
பெல்மோரல் பகுதியைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் தாம் வாங்கும் ஒரு நாள் சம்பளத்தை வைத்தே சினேகாவை நிகழ்ச்சி அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சினேகா 'எள்ளுவாய பூக்களையே' பாடலை பாடி நடுவர்களை வியப்பில் ஆழ்த்தியதுடன் நிகழ்ச்சிக்கும் தெரிவாகியுள்ளார்.
அங்கு, என்னை இந்த நிகழ்ச்சி அனுப்பிய என் மக்களுக்கு நன்றி - உங்களுக்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். இறுதி வரை நிகழ்ச்சியில் தொடர்வேன் என சினேகா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சரிகமப சீனியர் 5ல் இலங்கையை சேர்ந்த மூன்று தமிழர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அதில், சுவிஸ் வாழ் இலங்கை தமிழர் பிரஷான், கிழக்கு இலங்கையில் இருந்து சபீசன், யாழ்ப்பாணத்தில் இருந்து தரங்கினி உள்ளிட்ட மூவர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே சரிகமப லிட்டில் சாம்ஸ் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக இலங்கையை சேர்ந்த கில்மிஷா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து சரிகமப மேடையில் கலக்கும் இலங்கைத் தமிழர்கள்- களமிறங்கிய மலையகக் குயில் இந்நியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரி கம பா நிகழ்ச்சியில் நுவரெலியா மாவட்டம் பெல்மோரல் பகுதியைச் சேர்ந்த யுவதியான சினேகா என்பவரும் தெரிவாகியுள்ளார். சரிகமப லிட்டில் சேம்ஸ் நிறைவடைந்த நிலையில், தற்போது சீனியர் சீசன் 5க்கான மெகா ஆடிசன் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சரிகமப நிகழ்ச்சின் மெகா ஒடிஷன் ப்ரொமோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.அதில், நுவரெலியா மாவட்டம் பெல்மோரல் பகுதியைச் சேர்ந்த யுவதி சினேகாவும் தெரிவாகியுள்ளார். பெல்மோரல் பகுதியைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் தாம் வாங்கும் ஒரு நாள் சம்பளத்தை வைத்தே சினேகாவை நிகழ்ச்சி அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் சினேகா 'எள்ளுவாய பூக்களையே' பாடலை பாடி நடுவர்களை வியப்பில் ஆழ்த்தியதுடன் நிகழ்ச்சிக்கும் தெரிவாகியுள்ளார். அங்கு, என்னை இந்த நிகழ்ச்சி அனுப்பிய என் மக்களுக்கு நன்றி - உங்களுக்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். இறுதி வரை நிகழ்ச்சியில் தொடர்வேன் என சினேகா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சரிகமப சீனியர் 5ல் இலங்கையை சேர்ந்த மூன்று தமிழர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள்.அதில், சுவிஸ் வாழ் இலங்கை தமிழர் பிரஷான், கிழக்கு இலங்கையில் இருந்து சபீசன், யாழ்ப்பாணத்தில் இருந்து தரங்கினி உள்ளிட்ட மூவர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.ஏற்கனவே சரிகமப லிட்டில் சாம்ஸ் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக இலங்கையை சேர்ந்த கில்மிஷா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.