• Sep 20 2024

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை! samugammedia

Chithra / Jun 21st 2023, 3:17 pm
image

Advertisement

நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது தொடர்பிலான வழிகாட்டுதல்களை வெளியிடுவது முக்கியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவை விடுதலை செய்வதற்கான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி பெண்கள் ஊடக அமைப்புக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

ரோயல் பார்க் கொலை வழக்கு எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பில் விவாதம் செய்ய முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சட்ட விதிகளுக்கு அமைவாக அதிகாரம் பயன்படுத்தப்பட்டாலும் ஜனாதிபதிகள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்ப்பதற்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லை என சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகவே ஆவணங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மேலதிக விசாரணை ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மேலதிக சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார்.


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை samugammedia நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது தொடர்பிலான வழிகாட்டுதல்களை வெளியிடுவது முக்கியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவை விடுதலை செய்வதற்கான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி பெண்கள் ஊடக அமைப்புக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,ரோயல் பார்க் கொலை வழக்கு எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பில் விவாதம் செய்ய முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.எவ்வாறாயினும், சட்ட விதிகளுக்கு அமைவாக அதிகாரம் பயன்படுத்தப்பட்டாலும் ஜனாதிபதிகள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்ப்பதற்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.இதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லை என சுட்டிக்காட்டியிருந்தார்.ஆகவே ஆவணங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நீதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் மேலதிக விசாரணை ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மேலதிக சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement