• Sep 28 2024

கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம்..! கரையொதுங்கிய சடலம்..!

Chithra / Feb 17th 2024, 8:08 am
image

Advertisement


அம்பாறை மாவட்டம் - ஓலுவில், நிந்தவூர் எல்லைக் கடற்கரையில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று மாலை  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்  காணாமல்போன  சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற  மாணவனின் உடல் இன்று காலை   கரையோதுங்கியுள்ளது.

மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சம்பவதினம் மாளிகைக்காடு - சாய்ந்தமருது பகுதியை  சேர்ந்த இரண்டு மாணவர்களே புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

15 வயதுக்குட்பட்ட 08  பாடசாலை  மாணவர்கள்  தொழுகையை முடித்துக்கொண்டு, 

துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர் - ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது  இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய ஆறு மாணவர்களிடம்  நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம். கரையொதுங்கிய சடலம். அம்பாறை மாவட்டம் - ஓலுவில், நிந்தவூர் எல்லைக் கடற்கரையில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று மாலை  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும்  காணாமல்போன  சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற  மாணவனின் உடல் இன்று காலை   கரையோதுங்கியுள்ளது.மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.சம்பவதினம் மாளிகைக்காடு - சாய்ந்தமருது பகுதியை  சேர்ந்த இரண்டு மாணவர்களே புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.15 வயதுக்குட்பட்ட 08  பாடசாலை  மாணவர்கள்  தொழுகையை முடித்துக்கொண்டு, துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர் - ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது  இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.இதேவேளை ஏனைய ஆறு மாணவர்களிடம்  நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement