சூடானில் மோதலில் ஈடுபட்டு வரும் இரண்டு தரப்பினரும் தற்காலிகமாக போரை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்ட நிலையில் அவசர மனிதாபிமான வழக்குகள் பாதுகாப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்மொழிவுக்கு சூடான் ஆயுதப் படைகளும் மற்றும் துணை இராணுவப் படைகளும் இணங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இரு தரப்பிற்கும் இடையேயான அதிகார போராட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் உயிர் பலியாகியுள்ளதாகவும், உலக உணவுத் திட்டத்தின் பணியாளர்களில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதை தொடர்ந்து, சூடானுக்கான பணிகளை உலக உணவுத் திட்டம் உடனடியாக இடை நிறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.