• Oct 23 2024

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் திடீர் மரணம்- யாழில் துயரம்..!

Sharmi / Oct 23rd 2024, 2:32 pm
image

Advertisement

வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர்  திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயக தேசிய கூட்டணியில்  இம்முறை பாராளுமன்ற தேர்தலில்  போட்டியிடும்  இளம் வேட்பாளரும், முன்னாள்  வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான செந்திவேல் தமிழினியன் வயது  33 என்பவரே திடீரென உயிரிழந்துள்ளார் .

கடந்த 4 நாட்களாக சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக  சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  இன்று அதிகாலை  உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் திடீர் மரணம்- யாழில் துயரம். வல்வெட்டித்துறை பகுதியில் இளம் பாராளுமன்ற வேட்பாளர்  திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜனநாயக தேசிய கூட்டணியில்  இம்முறை பாராளுமன்ற தேர்தலில்  போட்டியிடும்  இளம் வேட்பாளரும், முன்னாள்  வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினருமான செந்திவேல் தமிழினியன் வயது  33 என்பவரே திடீரென உயிரிழந்துள்ளார் .கடந்த 4 நாட்களாக சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக  சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  இன்று அதிகாலை  உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement