மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் மீது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றையதினம்(18) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம்(18) ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான Dr.பகீரதன், Dr.சஞ்சீவன் ஆகியோர்களின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்ககளால் திடீர் சோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த நடவடிக்கையின் போது மாங்குள பகுதியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் மூடப்பட்டதுடன் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் இனங்காணப்பட்டு உடனடியாக அழிப்பு செய்யப்பட்டது.
இவ்வாறு மூடப்பட்ட உணவகங்களில் இனங்காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை10 நாட்களில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாவிடின் உணவக உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாங்குளத்தில் உணவகங்கள் மீது திடீர் சோதனை: சிக்கலில் மாட்டிய உணவகங்கள். மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் மீது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றையதினம்(18) திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு மாங்குளம் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள உணவகங்களில் இன்றையதினம்(18) ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரிகளான Dr.பகீரதன், Dr.சஞ்சீவன் ஆகியோர்களின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்ககளால் திடீர் சோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.குறித்த நடவடிக்கையின் போது மாங்குள பகுதியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகம் மூடப்பட்டதுடன் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகள் இனங்காணப்பட்டு உடனடியாக அழிப்பு செய்யப்பட்டது. இவ்வாறு மூடப்பட்ட உணவகங்களில் இனங்காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை10 நாட்களில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாவிடின் உணவக உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.