• Sep 17 2024

நீதிக்காகப் போராடும் வடமாகாண அரச சாரதிகளுக்கு பூரண ஆதரவு - சுகாஷ் தெரிவிப்பு!

Chithra / Jun 5th 2024, 4:48 pm
image

Advertisement

 

5 ஆண்டுகள் பணியாற்றிய அரச சாரதிகள் இடமாற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அரச சாரதிகள் தமது இடமாற்றத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் குறித்த போராட்ட பகுதிக்கு சென்று அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

01.06.2024 இல் இடமாற்றம் வழங்கப்படுமென்று ஆளுநர் அலுவலகம் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் உடனடியாக இடமாற்றப் பணிகளை ஆரம்பிக்குமாறு கோருகின்றோம்.

சட்டத்தின் பிரகாரம் நீதிக்காகப் போராடும் வட மாகாண அரச சாரதிகளுக்கு எமது பரிபூரண ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.


நீதிக்காகப் போராடும் வடமாகாண அரச சாரதிகளுக்கு பூரண ஆதரவு - சுகாஷ் தெரிவிப்பு  5 ஆண்டுகள் பணியாற்றிய அரச சாரதிகள் இடமாற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.அரச சாரதிகள் தமது இடமாற்றத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த போராட்ட பகுதிக்கு சென்று அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,01.06.2024 இல் இடமாற்றம் வழங்கப்படுமென்று ஆளுநர் அலுவலகம் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் உடனடியாக இடமாற்றப் பணிகளை ஆரம்பிக்குமாறு கோருகின்றோம்.சட்டத்தின் பிரகாரம் நீதிக்காகப் போராடும் வட மாகாண அரச சாரதிகளுக்கு எமது பரிபூரண ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement