• Oct 05 2024

ஸ்வீடன் தூதுவர்- பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு..!

Sharmi / Oct 5th 2024, 3:16 pm
image

Advertisement

சுவீடன் அரசாங்கம் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஸ்வீடன் தூதுவர் ஜான் தெஸ்லெஃப் ஆகியோருக்கு இடையில் நேற்று(04) பிற்பகல் கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில்  கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது, புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டமைக்கு ஸ்வீடன் அரசாங்கத்தின் வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்தார்.

 ஸ்வீடன் அரசாங்கத்தின் முதலீடுகள் முதன்மையாக இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், ஸ்வீடன் அரசாங்கத்தின் கவனம் இலங்கையின் உணவுப் பாதுகாப்பில் குவிந்துள்ளதாகவும்  ஜான் தெஸ்லெஃப் குறிப்பிட்டார். 

 குழந்தை போஷாக்கு பிரச்சினையை சுவீடன் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வந்த பிரதமர், இலங்கை பிராந்தியத்தில் உயர் சுகாதார குறிகாட்டிகளை பேணி வருகின்ற போதிலும், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போசாக்கு சவால்கள் இன்னமும் காணப்படுவதாகவும் வலியுறுத்தினார். 

 பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் வீசா சிரமங்கள் குறித்து சுவீடன் தூதுவர் ஜான் தெஸ்லெப்பின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

 பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, இலங்கைக்கான ஸ்வீடனின் தூதர் சஞ்சய் சுமந்திரி குலதுங்க, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி கே குணசேகர ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.


ஸ்வீடன் தூதுவர்- பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு. சுவீடன் அரசாங்கம் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஸ்வீடன் தூதுவர் ஜான் தெஸ்லெஃப் ஆகியோருக்கு இடையில் நேற்று(04) பிற்பகல் கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில்  கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.இதன்போது, புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டமைக்கு ஸ்வீடன் அரசாங்கத்தின் வாழ்த்துக்களை தூதுவர் தெரிவித்தார். ஸ்வீடன் அரசாங்கத்தின் முதலீடுகள் முதன்மையாக இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், ஸ்வீடன் அரசாங்கத்தின் கவனம் இலங்கையின் உணவுப் பாதுகாப்பில் குவிந்துள்ளதாகவும்  ஜான் தெஸ்லெஃப் குறிப்பிட்டார்.  குழந்தை போஷாக்கு பிரச்சினையை சுவீடன் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வந்த பிரதமர், இலங்கை பிராந்தியத்தில் உயர் சுகாதார குறிகாட்டிகளை பேணி வருகின்ற போதிலும், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போசாக்கு சவால்கள் இன்னமும் காணப்படுவதாகவும் வலியுறுத்தினார்.  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் வீசா சிரமங்கள் குறித்து சுவீடன் தூதுவர் ஜான் தெஸ்லெப்பின் கவனத்திற்கு கொண்டு சென்றார். பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, இலங்கைக்கான ஸ்வீடனின் தூதர் சஞ்சய் சுமந்திரி குலதுங்க, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி கே குணசேகர ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement