• Oct 07 2024

இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் பயங்கர நிலச்சரிவு...! 11 பேர் உயிரிழப்பு- 19 பேர் மாயம்...!

Sharmi / Jul 8th 2024, 6:44 pm
image

Advertisement

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை நிலச்சரிவில் சிக்கி 19 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பெய்து வரும் கனமழையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 35 பேர் மண்சரிவில் சிக்கிய நிலையில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அதேவேளை, நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் உடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் பயங்கர நிலச்சரிவு. 11 பேர் உயிரிழப்பு- 19 பேர் மாயம். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.அதேவேளை நிலச்சரிவில் சிக்கி 19 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தற்போது பெய்து வரும் கனமழையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 35 பேர் மண்சரிவில் சிக்கிய நிலையில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.அதேவேளை, நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில் உடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement