தாய்லாந்தில் உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிய பாத யாத்திரையை முன்னெடுக்கும் முகமாக தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பௌத்த தேரர்கள் திருகோணமலையை வந்தடைந்துள்ளனர்.
திருகோணமலை நகர இறங்குதுறைக்கு இயந்திரப்படகுகள் மூலமாக இன்று வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் உட்டதுறைமுக வீதிவழியாக கண்டி நோக்கிய பாத யாத்திரையை தாய்லாந்தில் இருந்து வருகை தந்துள்ள பௌத்த தேரர்கள் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்தில் இருந்து வருகை தந்துள்ள பௌத்த தேரர்களை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட நதில்லோ பஞ்ஞாலோகோ தேரர் மற்றும் குழுவினர் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்து பிக்குகள் இயந்திரப்படகுகள் மூலம் திருகோணமலையில் samugammedia தாய்லாந்தில் உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிய பாத யாத்திரையை முன்னெடுக்கும் முகமாக தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பௌத்த தேரர்கள் திருகோணமலையை வந்தடைந்துள்ளனர்.திருகோணமலை நகர இறங்குதுறைக்கு இயந்திரப்படகுகள் மூலமாக இன்று வருகை தந்துள்ளனர்.இந்நிலையில் உட்டதுறைமுக வீதிவழியாக கண்டி நோக்கிய பாத யாத்திரையை தாய்லாந்தில் இருந்து வருகை தந்துள்ள பௌத்த தேரர்கள் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தாய்லாந்தில் இருந்து வருகை தந்துள்ள பௌத்த தேரர்களை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட நதில்லோ பஞ்ஞாலோகோ தேரர் மற்றும் குழுவினர் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.