தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழிலுள்ள ஆலயங்களில் இன்று காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
குறித்த பூஜை வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதேவேளை,
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தைப்பொங்கல் சிறப்பு பூசைகள் இன்றைய தினம் காலை ஆலய பிரதம குரு கணபதீசுவரக் குருக்கள் கணேஸ்வரக்குருக்கள் தலைமையில் இடம் பெற்றது.
இன்று காலை விசேட வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதியில் உலாவந்ததுடன் காலை 8:00 மணியளவில் பொங்கல் சிறப்பு பூசைகள் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.