• Feb 09 2025

தையிட்டி விகாரை; என்மீது சேறுபூசும் செயலை முன்னெடுக்கும் அரசின் கையாலாகாத செயல் -அங்கஜன் காட்டம்..!

Sharmi / Feb 8th 2025, 9:29 pm
image

தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை பிரச்சனையை இன்று  திசை திருப்பி என்மீது சேறுபூசும் செயலை சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்வது தற்போதைய அரசின் கையால் ஆகாத செயலையே காட்டுவதாக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்றையதினம்(08) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அண்மைய நாட்களாக தையிட்டியில் சட்ட விரோத விகாரை அமைந்துள்ளமை தொடர்பான விடயம் சமூக வலைத்தளங்களில் முக்கியமான பேசுபொருளாக அமைந்துள்ளது.

தனியார் காணியில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை கட்டிடமானது வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது. 

கடந்த இரண்டு மூன்று நாட்களாக தற்பொழுது உள்ள ஆட்சியாளர்கள் சார்ந்த சமூக ஊடகங்களில் நான் கூறியதாக பதிவேற்றப்பட்டுள்ளது.

இராணுவம் தம்வசம் வைத்துள்ள காணிகளை விட்டு வெளியேறும் போது கட்டிடங்கள், விகாரைகளை இடித்து அழித்து விட்டு செல்வார்கள் என்று. 

இப்படியான ஒரு கருத்தை நான் எந்த இடத்திலும் கூறவில்லை கூறுவதற்கான அதிகாரம் எனக்கில்லை அவர்களின் தரப்பை சார்ந்தவனும் நான் இல்லை மக்களுடன் இணைந்து மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களின் சார்பாக செயற்பட்டுள்ளேன் என்பதனை நான் ஆணித்தரமாக கூறுகின்றேன் 

மக்களிற்கு காணிக்கான நட்டஈட்டினை வழங்க வேண்டும் என்றும் நான் கூறவில்லை 

நான் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் வலி வடக்கு பிரதேச செயலாளரும் இணைந்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஏக மனதாக முடிவு எடுத்து கூறியியிருந்தோம் தையிட்டியில் சட்ட விரோதமாக கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்படும் விகாரையை நிறுத்தும்படி  

நான் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவராகவும் இணைத்தலைவர் கௌரவ ஆளுநரும் மற்றும் மாவட்ட செயலாளரும் இணைந்து நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஏக மனதாக முடிவு எடுத்து கூறியியிருந்தோம்.

தையிட்டியில் சட்ட விரோதமாக கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்படும் விகாரையை நிறுத்தும்படி அங்கு வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலாளர் அவர்களும் மற்றும் ராணுவ அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் திணைக்கள அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றி இருந்தனர் 

மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தங்களது நிர்வாக கட்டமைப்பின் பொருத்தமான திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு ( இது தொடர்பான பதிவுகள் எனது முகப்புத்தகத்தில் உள்ளது ) 

1982 ம் ஆண்டின் உள்ளுராட்சி சபைகள் சடடத்தின் மூலம் அனுமதி அற்ற கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கான முழு அதிகாரம் பிரதேச சபைக்கு உள்ளது தையிட்டியில் அனுமதி இன்றி கட்டிடம் கட்டும்போது பிரதேச சபை தலைவர் செயலாளர் பொருத்தமான நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தை நாடி தீர்வை காண்பது அவர்களின் சட்ட கோவைக்கு உட்பட்டது  

காணி உரிமையாளர்களும் அவர்களின் சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கையை எடுத்திருக்கலாம் சட்ட யாம்பவான்களான மக்கள் பிரதி நிதிகளும் இது சார்ந்து ஆர்ப்பாட்டங்களை தாண்டியும் சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும் 

 கடந்த காலத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆற்ப்பாட்டத்திலும் நான் கலந்து கொண்டு எனது ஆதரவினை தெரிவித்திருந்தேன் 

இது உண்மையில் என்மீது சேறு பூசும் செயல் அதாவது கடந்த 31.01.2025 திகதி மாவட்ட செயலகத்தில் கௌரவ ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் அதற்கான தீர்வினை பாதிக்கப்படட மக்களிற்றகு கொடுத்திருக்க வேண்டும் அவ்வாறு செய்யாமல் சென்றுவிட்டு இன்று பிரச்சனையை திசை திருப்பி என்மீது சேறுபூசும் செயலை சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்வது தற்போதைய அரசின் கையால் ஆகாத செயலையே காட்டுகின்றது  

இதனை அனுமதிக்க முடியாது தற்போதைய அரசாங்கம் என்மீது சேறுபூசும் நடவடிக்கையை நிறுத்தி பாதிக்கப்படட மக்களிற்கு அவர்களது காணிகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் தங்களது அரசு மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தையிட்டி விகாரை; என்மீது சேறுபூசும் செயலை முன்னெடுக்கும் அரசின் கையாலாகாத செயல் -அங்கஜன் காட்டம். தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை பிரச்சனையை இன்று  திசை திருப்பி என்மீது சேறுபூசும் செயலை சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்வது தற்போதைய அரசின் கையால் ஆகாத செயலையே காட்டுவதாக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் இன்றையதினம்(08) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,அண்மைய நாட்களாக தையிட்டியில் சட்ட விரோத விகாரை அமைந்துள்ளமை தொடர்பான விடயம் சமூக வலைத்தளங்களில் முக்கியமான பேசுபொருளாக அமைந்துள்ளது.தனியார் காணியில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை கட்டிடமானது வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக தற்பொழுது உள்ள ஆட்சியாளர்கள் சார்ந்த சமூக ஊடகங்களில் நான் கூறியதாக பதிவேற்றப்பட்டுள்ளது. இராணுவம் தம்வசம் வைத்துள்ள காணிகளை விட்டு வெளியேறும் போது கட்டிடங்கள், விகாரைகளை இடித்து அழித்து விட்டு செல்வார்கள் என்று. இப்படியான ஒரு கருத்தை நான் எந்த இடத்திலும் கூறவில்லை கூறுவதற்கான அதிகாரம் எனக்கில்லை அவர்களின் தரப்பை சார்ந்தவனும் நான் இல்லை மக்களுடன் இணைந்து மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களின் சார்பாக செயற்பட்டுள்ளேன் என்பதனை நான் ஆணித்தரமாக கூறுகின்றேன் மக்களிற்கு காணிக்கான நட்டஈட்டினை வழங்க வேண்டும் என்றும் நான் கூறவில்லை நான் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் வலி வடக்கு பிரதேச செயலாளரும் இணைந்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஏக மனதாக முடிவு எடுத்து கூறியியிருந்தோம் தையிட்டியில் சட்ட விரோதமாக கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்படும் விகாரையை நிறுத்தும்படி  நான் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவராகவும் இணைத்தலைவர் கௌரவ ஆளுநரும் மற்றும் மாவட்ட செயலாளரும் இணைந்து நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஏக மனதாக முடிவு எடுத்து கூறியியிருந்தோம். தையிட்டியில் சட்ட விரோதமாக கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்படும் விகாரையை நிறுத்தும்படி அங்கு வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலாளர் அவர்களும் மற்றும் இராணுவ அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் திணைக்கள அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றி இருந்தனர் மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தங்களது நிர்வாக கட்டமைப்பின் பொருத்தமான திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு ( இது தொடர்பான பதிவுகள் எனது முகப்புத்தகத்தில் உள்ளது ) 1982 ம் ஆண்டின் உள்ளுராட்சி சபைகள் சடடத்தின் மூலம் அனுமதி அற்ற கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கான முழு அதிகாரம் பிரதேச சபைக்கு உள்ளது தையிட்டியில் அனுமதி இன்றி கட்டிடம் கட்டும்போது பிரதேச சபை தலைவர் செயலாளர் பொருத்தமான நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தை நாடி தீர்வை காண்பது அவர்களின் சட்ட கோவைக்கு உட்பட்டது  காணி உரிமையாளர்களும் அவர்களின் சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கையை எடுத்திருக்கலாம் சட்ட யாம்பவான்களான மக்கள் பிரதி நிதிகளும் இது சார்ந்து ஆர்ப்பாட்டங்களை தாண்டியும் சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும்  கடந்த காலத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆற்ப்பாட்டத்திலும் நான் கலந்து கொண்டு எனது ஆதரவினை தெரிவித்திருந்தேன் இது உண்மையில் என்மீது சேறு பூசும் செயல் அதாவது கடந்த 31.01.2025 திகதி மாவட்ட செயலகத்தில் கௌரவ ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் அதற்கான தீர்வினை பாதிக்கப்படட மக்களிற்றகு கொடுத்திருக்க வேண்டும் அவ்வாறு செய்யாமல் சென்றுவிட்டு இன்று பிரச்சனையை திசை திருப்பி என்மீது சேறுபூசும் செயலை சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்வது தற்போதைய அரசின் கையால் ஆகாத செயலையே காட்டுகின்றது  இதனை அனுமதிக்க முடியாது தற்போதைய அரசாங்கம் என்மீது சேறுபூசும் நடவடிக்கையை நிறுத்தி பாதிக்கப்படட மக்களிற்கு அவர்களது காணிகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் தங்களது அரசு மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement