ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவோடு, கிண்ணியா பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது
கிண்ணியா பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (17)இடம் பெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இந்த அமர்வு இடம்பெற்றது.
இதன் போது, கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்காக இடம்பெற்ற, பகிரங்க வாக்களிப்பில் அகில இலங்கை மக்கள் சார்பில் போட்டியிட்ட தவிசாளர் வேட்பாளர் ஏ. ஆர். எம். அஸ்மி வெற்றி பெற்றுள்ளார்.
14 உறுப்பினர்களைக் கொண்ட கிண்ணியா நகர சபையில், 08 வாக்குகளை ஏ. ஆர். எம். அஸ்மி பெற்றுக்கொண்டார்,
இவருக்கு ஆதரவாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில், தவிசாளருக்காக போட்டியிட்ட, எம்.ஈ.எம். ராபிக் 03 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
இவருக்கு ஆதரவாக, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவரும், தேசிய நல்லாட்சிக்கான முன்னணி உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தனர்.
தவிசாளர் தெரிவின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்களும்
ஏ. ஆர். எம். அஸ்மிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த 2 உறுப்பினர்களும் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் தவிசாளர் தெரிவின் போது, நடுநிலைமை வகித்தனர்.
உதவி தவிசாளராக, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் என். முசாபிக் போட்டியின்றி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.
நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத, கிண்ணியா பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கைப்பற்றியுள்ளது.
14 உறுப்பினர்களைக் கொண்ட, கிண்ணியா நகர சபைக்கான, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 5 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா 2 ஆசனங்களையும், தேசிய காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது- கிண்ணியா பிரதேச சபை. ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவோடு, கிண்ணியா பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமானது கிண்ணியா பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (17)இடம் பெற்றது.கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இந்த அமர்வு இடம்பெற்றது.இதன் போது, கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்காக இடம்பெற்ற, பகிரங்க வாக்களிப்பில் அகில இலங்கை மக்கள் சார்பில் போட்டியிட்ட தவிசாளர் வேட்பாளர் ஏ. ஆர். எம். அஸ்மி வெற்றி பெற்றுள்ளார்.14 உறுப்பினர்களைக் கொண்ட கிண்ணியா நகர சபையில், 08 வாக்குகளை ஏ. ஆர். எம். அஸ்மி பெற்றுக்கொண்டார்,இவருக்கு ஆதரவாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.தேசிய மக்கள் சக்தியின் சார்பில், தவிசாளருக்காக போட்டியிட்ட, எம்.ஈ.எம். ராபிக் 03 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.இவருக்கு ஆதரவாக, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவரும், தேசிய நல்லாட்சிக்கான முன்னணி உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தனர்.தவிசாளர் தெரிவின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்களும் ஏ. ஆர். எம். அஸ்மிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த 2 உறுப்பினர்களும் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் தவிசாளர் தெரிவின் போது, நடுநிலைமை வகித்தனர். உதவி தவிசாளராக, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் என். முசாபிக் போட்டியின்றி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத, கிண்ணியா பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கைப்பற்றியுள்ளது.14 உறுப்பினர்களைக் கொண்ட, கிண்ணியா நகர சபைக்கான, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 5 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா 2 ஆசனங்களையும், தேசிய காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.