புத்தளம் - மாதம்பே, செபஸ்டியன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது அவர்களின் உடலில் சிவப்பு நிற தழும்புகள் தோன்றுதல் மற்றும் தோல் அரிப்பு என்பன ஏற்பட்டுள்ளன.
இதனை அவதானித்த ஆசிரியர், சுகயீனமுற்ற மாணவர்களை உடனடியாக மாதம்பே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
அடிப்படை சிகிச்சையின் பின்னர் மாணவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீரென சிவப்பு நிறமாக மாறியமாணவர்களின் உடல்கள்; புத்தளம் பாடசாலையில் சம்பவம் புத்தளம் - மாதம்பே, செபஸ்டியன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.இந்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது அவர்களின் உடலில் சிவப்பு நிற தழும்புகள் தோன்றுதல் மற்றும் தோல் அரிப்பு என்பன ஏற்பட்டுள்ளன.இதனை அவதானித்த ஆசிரியர், சுகயீனமுற்ற மாணவர்களை உடனடியாக மாதம்பே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். அடிப்படை சிகிச்சையின் பின்னர் மாணவர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.