• Sep 21 2024

யாழில் காணமால் போன இளைஞன் சடலமாக மீட்பு ..! samugammedia

Tamil nila / Dec 15th 2023, 8:49 pm
image

Advertisement

காணமால் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காணமால் போன இளைஞன் ஒருவரது  சடலம் தோட்ட கிணற்றில் இன்றையதினம் (15) மீட்கப்பட்டது. 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,  கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து நிரோசன் (வயது 29) என்பவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி 4 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


யாழில் காணமால் போன இளைஞன் சடலமாக மீட்பு . samugammedia காணமால் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.காணமால் போன இளைஞன் ஒருவரது  சடலம் தோட்ட கிணற்றில் இன்றையதினம் (15) மீட்கப்பட்டது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,  கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து நிரோசன் (வயது 29) என்பவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி 4 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement