தனது பிறந்த தினத்தன்று சிறுவன் ஒருவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள பாபாபூர் கிராமத்தைச் சேர்ந்த சி.ஹெச். சச்சின் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சச்சினின் அந்த பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்ட அவரது குடும்பத்தினர் அதற்காக கேக் வாங்கி, வீட்டை அலங்காரம் செய்துள்ள நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி உள்ளனர்.
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போதே சச்சின் திடீரென சுருண்டு கீழே விழுந்தமையால் குடும்பத்தினர், சச்சினை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
16 வயதேயான சிறுவன் தனது பிறந்த நாளில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமன்றி, அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் சடலமாக வீட்டுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட சச்சினுக்கு, அவரது குடும்பத்தினர் பிறந்தநாளுக்கு வாங்கிய கேக்கை வெட்டி அருகில் வைத்து நினைவஞ்சலி செலுத்தி மரியாதை செய்துள்ளனர் .
இச்சம்பவம் அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலரையும் கண்ணீரில் மூழ்கடிக்க செய்துள்ளது.
பிறந்தநாளன்று மாரடைப்பால் மாண்ட சிறுவன். உடல் அருகே கேக் வெட்டி உறைந்து போன பெற்றோர்.samugammedia தனது பிறந்த தினத்தன்று சிறுவன் ஒருவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள பாபாபூர் கிராமத்தைச் சேர்ந்த சி.ஹெச். சச்சின் என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். சச்சினின் அந்த பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்ட அவரது குடும்பத்தினர் அதற்காக கேக் வாங்கி, வீட்டை அலங்காரம் செய்துள்ள நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகி உள்ளனர். பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் போதே சச்சின் திடீரென சுருண்டு கீழே விழுந்தமையால் குடும்பத்தினர், சச்சினை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 16 வயதேயான சிறுவன் தனது பிறந்த நாளில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமன்றி, அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சடலமாக வீட்டுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்ட சச்சினுக்கு, அவரது குடும்பத்தினர் பிறந்தநாளுக்கு வாங்கிய கேக்கை வெட்டி அருகில் வைத்து நினைவஞ்சலி செலுத்தி மரியாதை செய்துள்ளனர் . இச்சம்பவம் அவரது நண்பர்கள், உறவினர்கள் என பலரையும் கண்ணீரில் மூழ்கடிக்க செய்துள்ளது.