இலங்கையில் சுற்றுலாத் துறை 122 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரியில், சுற்றுலாத் துறை மூலம் 342 மில்லியன் டொலர்கள் வருமானம் கிட்டியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டின் வருவாயை விட 122 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தொடர்ந்து எதிர்மறை வளர்ச்சியை சந்தித்து வந்த இலங்கையின் பொருளாதாரம், கடந்த ஆண்டில் மீண்டும் நேர்மறை வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.