உணவு ஆர்டர்களுக்கான விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட் வரி அதிகரிப்பினை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில், உணவு ஆர்டர்களுக்கான விலையை உயர்த்த அகில இலங்கை விழா மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, உணவு ஆர்டர்களுக்கான விலையை 10 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை விழா மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குவோர் சங்கம் தெரிவித்துள்ளது.