• Sep 20 2024

வெலிக்கடையில் இருந்து தப்பிச்சென்ற மரண தண்டனை கைதிக்கு நேர்ந்த கதி..! samugammedia

Tamil nila / Jun 25th 2023, 6:39 pm
image

Advertisement

சிறைச்சாலை அதிகாரியின் சீருடை போன்ற, சீருடை அணிந்து கைதியொருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் தப்பிச் சென்ற போது  கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (25) மத நிகழ்வுக்காக சிறைச்சாலையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்திருந்தாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேகமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் கைதியை துரத்திச் சென்று, மருதானை புகையிரத நிலையத்தில் கைதுசெய்து, வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வந்துள்ளனர். 

42 வயதுடைய பன்னல பிரதேசத்தை சேர்ந்த நபரே தப்பிச் செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2015ஆம் ஆண்டு கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி என தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடையில் இருந்து தப்பிச்சென்ற மரண தண்டனை கைதிக்கு நேர்ந்த கதி. samugammedia சிறைச்சாலை அதிகாரியின் சீருடை போன்ற, சீருடை அணிந்து கைதியொருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் தப்பிச் சென்ற போது  கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இன்று (25) மத நிகழ்வுக்காக சிறைச்சாலையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்திருந்தாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.சந்தேகமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் கைதியை துரத்திச் சென்று, மருதானை புகையிரத நிலையத்தில் கைதுசெய்து, வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வந்துள்ளனர். 42 வயதுடைய பன்னல பிரதேசத்தை சேர்ந்த நபரே தப்பிச் செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2015ஆம் ஆண்டு கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி என தெரிவிக்கப்படுகிறது. மேலும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement