• May 18 2024

திருமலையில் திறக்கப்பட்ட வான்கதவுகள்..! வெள்ள நீரில் மூழ்கிய வீடுகள் - மக்கள் இடம்பெயர்வு

Chithra / Jan 14th 2024, 10:01 am
image

Advertisement


மாவிலாறு குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் வெருகல் - மாவடிச்சேனை பகுதியில் வெள்ள நிலமை ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

வெருகல் -மாவடிச்சேனை பகுதியிலுள்ள 118 குடும்பங்களைச் சேர்ந்த 327 நபர்கள் இடம்பெயர்ந்து வெருகல் - மாவடிச்சேனை இந்து மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவடிச்சேனை பகுதியிலுள்ள வீடுகள், வயல் நிலங்கள்  பலவும் வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

மாவடிச்சேனை பகுதியிலுள்ள திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியை ஊடறுத்து சுமார் இரண்டு அடியில் வெள்ளநீர் பிரவாகம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளதை காணமுடிந்தது.


திருமலையில் திறக்கப்பட்ட வான்கதவுகள். வெள்ள நீரில் மூழ்கிய வீடுகள் - மக்கள் இடம்பெயர்வு மாவிலாறு குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதால் வெருகல் - மாவடிச்சேனை பகுதியில் வெள்ள நிலமை ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.வெருகல் -மாவடிச்சேனை பகுதியிலுள்ள 118 குடும்பங்களைச் சேர்ந்த 327 நபர்கள் இடம்பெயர்ந்து வெருகல் - மாவடிச்சேனை இந்து மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மாவடிச்சேனை பகுதியிலுள்ள வீடுகள், வயல் நிலங்கள்  பலவும் வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.மாவடிச்சேனை பகுதியிலுள்ள திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியை ஊடறுத்து சுமார் இரண்டு அடியில் வெள்ளநீர் பிரவாகம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணிக்கும் வாகனங்கள் அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளதை காணமுடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement