உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டமையானது முற்றிலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனத் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான ஜெயந்த சமரவீர, இந்தத் தன்னிச்சையான கைது நடவடிக்கையைத் வன்மையாகக் கண்டித்தார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரர்களையும் புலனாய்வு அதிகாரிகளையும் இலக்கு வைத்துச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்குப் பதிலாக, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஒரு புலனாய்வு அதிகாரியைச் சிறையில் அடைப்பதன் மூலம் அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம் தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து, அவர்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக மாறியுள்ளதாக ஜெயந்த சமரவீர தனது உரையில் தெரிவித்தார்.
இலங்கையில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை இவ்வாறு வேட்டையாடுவது, நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பையும் சீர்குலைக்கும் செயலாகும் என்று அவர் எச்சரித்தார்.
சுரேஷ் சாலி மீதான குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரமும் அற்றவை என்றும், 2019 தாக்குதல் நடைபெற்ற காலகட்டத்தில் அவர் வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பதையும் அவர் ஆதாரங்களுடன் விளக்கினார்.
அரசாங்கம் தனது பொருளாதாரத் தோல்விகளையும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையையும் மறைக்கவே இத்தகைய கைது நாடகங்களை அரங்கேற்றுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்தக் கைது நடவடிக்கையானது தற்போதைய புலனாய்வுப் பிரிவினரிடையே ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளதாகவும், இது எதிர்காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் தேசிய சுதந்திர முன்னணி கவலை வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதிலேயே குறியாக இருப்பதாக ஜெயந்த சமரவீர விமர்சித்தார்.
சர்வதேச புலனாய்வுத் துறையில் நற்பெயரைக் கொண்டுள்ள ஒரு அதிகாரியை இவ்வாறு சிறுமைப்படுத்துவது சர்வதேச ரீதியில் இலங்கைக்குத் தேவையற்ற அவப்பெயரைத் தேடித்தரும் என்றும், இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராகத் தங்களது கட்சி தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கும் என்றும் அவர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய அதிகாரிகளை வேட்டையாடும் அரசு - சுரேஷ் சாலி கைதுக்கு கடும் கண்டனம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டமையானது முற்றிலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனத் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான ஜெயந்த சமரவீர, இந்தத் தன்னிச்சையான கைது நடவடிக்கையைத் வன்மையாகக் கண்டித்தார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரர்களையும் புலனாய்வு அதிகாரிகளையும் இலக்கு வைத்துச் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்குப் பதிலாக, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஒரு புலனாய்வு அதிகாரியைச் சிறையில் அடைப்பதன் மூலம் அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.தற்போதைய அரசாங்கம் தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து, அவர்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்றும் ஒரு கருவியாக மாறியுள்ளதாக ஜெயந்த சமரவீர தனது உரையில் தெரிவித்தார். இலங்கையில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை இவ்வாறு வேட்டையாடுவது, நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பையும் சீர்குலைக்கும் செயலாகும் என்று அவர் எச்சரித்தார். சுரேஷ் சாலி மீதான குற்றச்சாட்டுகள் எவ்வித ஆதாரமும் அற்றவை என்றும், 2019 தாக்குதல் நடைபெற்ற காலகட்டத்தில் அவர் வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பதையும் அவர் ஆதாரங்களுடன் விளக்கினார். அரசாங்கம் தனது பொருளாதாரத் தோல்விகளையும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமையையும் மறைக்கவே இத்தகைய கைது நாடகங்களை அரங்கேற்றுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.இந்தக் கைது நடவடிக்கையானது தற்போதைய புலனாய்வுப் பிரிவினரிடையே ஒருவித அச்சத்தை உருவாக்கியுள்ளதாகவும், இது எதிர்காலத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் தேசிய சுதந்திர முன்னணி கவலை வெளியிட்டுள்ளது.ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியைப் பெற்றுத் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதிலேயே குறியாக இருப்பதாக ஜெயந்த சமரவீர விமர்சித்தார். சர்வதேச புலனாய்வுத் துறையில் நற்பெயரைக் கொண்டுள்ள ஒரு அதிகாரியை இவ்வாறு சிறுமைப்படுத்துவது சர்வதேச ரீதியில் இலங்கைக்குத் தேவையற்ற அவப்பெயரைத் தேடித்தரும் என்றும், இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராகத் தங்களது கட்சி தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கும் என்றும் அவர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.