மட்டக்களப்பில் பிள்ளையான் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடியினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று(30) பகல் 11 மணியளவில் இருந்து தலைமைக் காரியாலயத்தை சுற்றிவளைத்து பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ஆம் திகதி சுப்பிரமணிய கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பிலுள்ள பிள்ளையான் கட்சியின் தலைமை காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த விசேட அதிரடிப்படை மற்றும் சிஐடியினர் இன்று முற்றுகையிட்டனர்.
தலைமை காரியாலயத்தில் இருந்தவர்களின் கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றியதுடன் தொடர்ந்து காரியாலயத்தில் இருந்து யாரும் வெளியே செல்லவிடாது பலத்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
பிள்ளையான் கட்சியின் தலைமைக் காரியாலயம் முற்றுகை; கொழும்பில் இருந்து வந்த சிஐடியினர் நடவடிக்கை மட்டக்களப்பில் பிள்ளையான் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த சிஐடியினர் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று(30) பகல் 11 மணியளவில் இருந்து தலைமைக் காரியாலயத்தை சுற்றிவளைத்து பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ஆம் திகதி சுப்பிரமணிய கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.இந்த நிலையில் மட்டக்களப்பிலுள்ள பிள்ளையான் கட்சியின் தலைமை காரியாலயத்தை கொழும்பில் இருந்து வந்த விசேட அதிரடிப்படை மற்றும் சிஐடியினர் இன்று முற்றுகையிட்டனர்.தலைமை காரியாலயத்தில் இருந்தவர்களின் கையடக்க தொலைபேசிகளை கைப்பற்றியதுடன் தொடர்ந்து காரியாலயத்தில் இருந்து யாரும் வெளியே செல்லவிடாது பலத்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்