• Apr 17 2026

பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் உடன் பதவி விலகவேண்டும் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

Chithra / Feb 25th 2026, 9:51 am
image


பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மக்கள் குரல் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் குரல் அமைப்பின் சார்பாக ஊடக அறிக்கையை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,


படுகொலை கலாசாரம் 2025 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக படுகொலை கலாசாரம் பலமடைந்து தற்போது தீவிரமடைந்துள்ளது.


நீதியை நிலைநாட்டும் நீதிமன்றம், அதிகாரிகள், சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமை ஒட்டுமொத்த சமூக கட்டமைப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


எந்நேரத்தில் எங்கு படுகொலைகள் இடம்பெறும் என்ற அச்சத்தில் தான் மக்கள் இன்று வாழ்கிறார்கள்.


தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் இந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. பொது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சகல கட்டமைப்பும் பலவீனமடைந்துள்ளது.


பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. இதன் பொறுப்பை ஏற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். அதேபோல் பொலிஸ் துறையும் இன்று அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆகவே பொலிஸ்மா அதிபரும் உடன் பதவி விலக வேண்டும்.


பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம். தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அரசியல்மயப்படுத்த கூடாது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் உடன் பதவி விலகவேண்டும் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டால் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மக்கள் குரல் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.மக்கள் குரல் அமைப்பின் சார்பாக ஊடக அறிக்கையை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,படுகொலை கலாசாரம் 2025 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக படுகொலை கலாசாரம் பலமடைந்து தற்போது தீவிரமடைந்துள்ளது.நீதியை நிலைநாட்டும் நீதிமன்றம், அதிகாரிகள், சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமை ஒட்டுமொத்த சமூக கட்டமைப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எந்நேரத்தில் எங்கு படுகொலைகள் இடம்பெறும் என்ற அச்சத்தில் தான் மக்கள் இன்று வாழ்கிறார்கள்.தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் இந்த பொறுப்பை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. பொது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சகல கட்டமைப்பும் பலவீனமடைந்துள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. இதன் பொறுப்பை ஏற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். அதேபோல் பொலிஸ் துறையும் இன்று அரசியலாக்கப்பட்டுள்ளது. ஆகவே பொலிஸ்மா அதிபரும் உடன் பதவி விலக வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம். தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அரசியல்மயப்படுத்த கூடாது என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement