• Sep 20 2024

யாழில் இன்று கைதுசெய்யப்பட்டவர்களை சந்தித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு!

Sharmi / Feb 11th 2023, 9:03 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 17 பேரினையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்துள்ளார்.

அதேவேளை தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டதுடன் கைதுக்குரிய காரணம் தொடர்பிலும் விசாரணையை கொண்டார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் இன்றையதினமே நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார்கள் என பொலிஸாரால் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.

யாழில் இன்று கைதுசெய்யப்பட்டவர்களை சந்தித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 17 பேரினையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை செய்துள்ளார்.அதேவேளை தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டதுடன் கைதுக்குரிய காரணம் தொடர்பிலும் விசாரணையை கொண்டார்.மேலும் கைது செய்யப்பட்டவர்கள் இன்றையதினமே நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவார்கள் என பொலிஸாரால் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement