• Oct 18 2024

தாயின் பொறுப்பற்ற செயல்; நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய 10 வயது சிறுமி! தமிழர் பகுதியில் கொடூரம் samugammedia

Chithra / Apr 8th 2023, 11:00 am
image

Advertisement

வவுனியாவில் 10 வயது சிறுமி நீண்டகாலமாக பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (08.04)  தெரிவித்தனர்.

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 10 வயது மாணவி ஒருவர் கடந்த 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து, கடந்த 30 ஆம் திகதி குறித்த மாணவியின் சகோதரன், சிறிய தந்தையார் உள்ளிட்ட 16, 32, 53 வயதுடைய மூவரை வவுனியா பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். குறித்த மூவரும் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையில் 10 வயது மாணவி நீண்டகாலமாக பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்றமைக்கு தாயின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் என சமூகமட்ட அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தாயின் பொறுப்பற்ற செயல்; நீண்டகாலமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய 10 வயது சிறுமி தமிழர் பகுதியில் கொடூரம் samugammedia வவுனியாவில் 10 வயது சிறுமி நீண்டகாலமாக பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (08.04)  தெரிவித்தனர்.வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 10 வயது மாணவி ஒருவர் கடந்த 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து, கடந்த 30 ஆம் திகதி குறித்த மாணவியின் சகோதரன், சிறிய தந்தையார் உள்ளிட்ட 16, 32, 53 வயதுடைய மூவரை வவுனியா பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். குறித்த மூவரும் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.குறித்த அறிக்கையில் 10 வயது மாணவி நீண்டகாலமாக பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்றமைக்கு தாயின் பொறுப்பற்ற செயற்பாடே காரணம் என சமூகமட்ட அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement