• Oct 15 2024

வீட்டு உரிமையாளரின் அலட்சியம்; பரிதாபமாக பறிபோன இளம் பெண்ணின் உயிர்

Chithra / Oct 15th 2024, 8:06 am
image

Advertisement

 

பத்தரமுல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து தவறி விழுந்து இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டு உரிமையாளரின் அலட்சியம் காரணமாகவே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்த 30 வயதான ஹன்சினி பாக்யா உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

பத்தரமுல்லை பிரதான வீதி சம்பத் பிளேஸில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் மற்றுமொரு தோழியுடன் அவர் தங்கி இருந்துள்ளார்.

கடமை முடிந்து கடந்த 11ம் திகதி மாலை 6.40 மணியளவில் ஹன்சினி தனது தங்கும் விடுதிக்கு வந்துள்ளார்.

அதன்பின்னர் ஹன்சினி இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்த போது குளியலறையில் இருந்த தோழிக்கு ஏதோ விழும் சத்தத்துடன் அலறல் சத்தம் கேட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

உடனடியாக குளியலறையில் இருந்து வெளியே வந்த தோழி, தங்குமிடத்திற்குப் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற இடத்தில் இருந்து ஹன்சினி கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேல் தளத்தில் உள்ள குறித்த பாதுகாப்பற்ற இடத்திற்கு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

பின்னர், ஹன்சனியை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹன்சினி நேற்று மதியம்  உயிரிழந்துள்ளார்.

மேலும் பட்டதாரியான ஹன்சினி அவரது குடும்பத்தில் மூன்றாவது மகளாவார்.

அவரது துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பலரும் விவாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

வீட்டு உரிமையாளரின் அலட்சியம்; பரிதாபமாக பறிபோன இளம் பெண்ணின் உயிர்  பத்தரமுல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து தவறி விழுந்து இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.வீட்டு உரிமையாளரின் அலட்சியம் காரணமாகவே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.சம்பவத்தில் உயிரிழந்த 30 வயதான ஹன்சினி பாக்யா உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.பத்தரமுல்லை பிரதான வீதி சம்பத் பிளேஸில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடியில் மற்றுமொரு தோழியுடன் அவர் தங்கி இருந்துள்ளார்.கடமை முடிந்து கடந்த 11ம் திகதி மாலை 6.40 மணியளவில் ஹன்சினி தனது தங்கும் விடுதிக்கு வந்துள்ளார்.அதன்பின்னர் ஹன்சினி இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்த போது குளியலறையில் இருந்த தோழிக்கு ஏதோ விழும் சத்தத்துடன் அலறல் சத்தம் கேட்டுள்ளதாக கூறப்படுகின்றது.உடனடியாக குளியலறையில் இருந்து வெளியே வந்த தோழி, தங்குமிடத்திற்குப் பின்னால் உள்ள பாதுகாப்பற்ற இடத்தில் இருந்து ஹன்சினி கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.மேல் தளத்தில் உள்ள குறித்த பாதுகாப்பற்ற இடத்திற்கு எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.பின்னர், ஹன்சனியை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.எனினும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹன்சினி நேற்று மதியம்  உயிரிழந்துள்ளார்.மேலும் பட்டதாரியான ஹன்சினி அவரது குடும்பத்தில் மூன்றாவது மகளாவார்.அவரது துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பலரும் விவாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement