நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
வட மாகாணத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று திங்கட்கிழமை 12 .30 மணியளவில் கிளிநொச்சி - வவுனியா வழியாக பயணத்தை மேற்கொள்ளும் பேருந்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிகளவான மக்கள் பொதுப்போக்குவரத்தை நம்பி பயணம் செய்கின்ற நிலையில்,
அண்மைக்காலமாக சாரதிகளின் கவனயீனம் காரணமாக பல உயிர்கள் பல்வேறு பகுதிகளில் பலியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.