பொலிஸ் அதிகாரியின் வலது கையைக் கடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கேகாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது
கேகாலை - ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
கேகாலை, ரன்வல பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், இரவு 10 .00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்வர்கள் பொலிஸ் உத்தரவையும் மீறி சென்றுள்ளார்.
பின்னர் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் சந்தேக நபரை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வலது கையைக் கடித்து காயப்படுத்தியுள்ளார்.
கேகாலை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
சந்தேக நபரை கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்பெகாண்டனர்
விசாரணையின் போது சந்தேக நபர் மதுபோதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்த நபர் நடந்தது என்ன பொலிஸ் அதிகாரியின் வலது கையைக் கடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கேகாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளதுகேகாலை - ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது கேகாலை, ரன்வல பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர், இரவு 10 .00 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்த முயன்றுள்ளனர்.இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்வர்கள் பொலிஸ் உத்தரவையும் மீறி சென்றுள்ளார்.பின்னர் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் சந்தேக நபரை துரத்திச் சென்று பிடித்துள்ளனர்.இதன்போது சந்தேக நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வலது கையைக் கடித்து காயப்படுத்தியுள்ளார். கேகாலை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.சந்தேக நபரை கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்பெகாண்டனர்விசாரணையின் போது சந்தேக நபர் மதுபோதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது