• May 16 2024

மாணவர்களுக்கு நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்தவர் சிக்கினார்! SamugamMedia

Chithra / Feb 26th 2023, 11:20 am
image

Advertisement

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள  வாகன புகை பரிசோதனை நிலையத்திற்கு  முன்னால் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞன் குறித்து  கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இதற்கமைய நேற்று (சனிக்கிழமை) மாலை சம்பவ இடத்திற்கு சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தேக நபரை கைது செய்ததுடன் சந்தேக நபரது உடமையில் இருந்து 1 கிராம் 80 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையிர் மீட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீண்ட காலமாக  ஐஸ் வியாபாரத்தை  தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு முன்னெடுத்து  வந்துள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

பின்னர்  கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்களுடன் பெரிய நீலாவணை   பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.


 

மாணவர்களுக்கு நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்தவர் சிக்கினார் SamugamMedia அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள  வாகன புகை பரிசோதனை நிலையத்திற்கு  முன்னால் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞன் குறித்து  கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.இதற்கமைய நேற்று (சனிக்கிழமை) மாலை சம்பவ இடத்திற்கு சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த 35 வயதான சந்தேக நபரை கைது செய்ததுடன் சந்தேக நபரது உடமையில் இருந்து 1 கிராம் 80 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையிர் மீட்டுள்ளனர்.கைதான சந்தேக நபர் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீண்ட காலமாக  ஐஸ் வியாபாரத்தை  தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு முன்னெடுத்து  வந்துள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.பின்னர்  கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்களுடன் பெரிய நீலாவணை   பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement