• Sep 17 2024

வீதி புனரமைப்பு உள்ளிட்ட பிரதேச அபிவிருத்திகளுக்கு பருத்தித்துறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிதி அனுமதி...!

Sharmi / Feb 13th 2024, 3:58 pm
image

Advertisement

பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது.

பருத்தித்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பிரதேச அபிவிருத்திக்கான நிதி ஒதுக்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக நிதி அனுமதி வழங்கப்பட்டது.

குறிப்பாக  வீதி புனரமைப்பு, தெரு விளக்குகள் பொருத்தல், கடற்கரை மீன்பிடி துறைக்கான வான் அமைப்பு, பாடசாலைகள் பொது இடங்களுக்கான மலசல கூடங்கள் அமைத்தலுக்கான நிதி அனுமதி வழங்கப்பட்டது.

இக் கூட்டத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், துறைசார் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வீதி புனரமைப்பு உள்ளிட்ட பிரதேச அபிவிருத்திகளுக்கு பருத்தித்துறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நிதி அனுமதி. பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது.பருத்தித்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பிரதேச அபிவிருத்திக்கான நிதி ஒதுக்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக நிதி அனுமதி வழங்கப்பட்டது.குறிப்பாக  வீதி புனரமைப்பு, தெரு விளக்குகள் பொருத்தல், கடற்கரை மீன்பிடி துறைக்கான வான் அமைப்பு, பாடசாலைகள் பொது இடங்களுக்கான மலசல கூடங்கள் அமைத்தலுக்கான நிதி அனுமதி வழங்கப்பட்டது.இக் கூட்டத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், துறைசார் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement