புங்குடுதீவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்வும் , நற்பணி செயற்பாடுகளும் புங்குடுதீவு வாழ் மக்களை மனதளவில் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
க. பொ.த. உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் தோற்றி 3 A சித்திகளை பெற்ற புங்குடுதீவை சேர்ந்த மேரி பவுஸ்ரினா எனும் மாணவியின் உயர்கற்கைக்கு உதவும் நோக்கில் புங்குடுதீவு உலகமையம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் முயற்சியினால் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ( 150 , 000 ) ரூபாய் வழங்கிவைக்கப்பட்டது . அண்மையில் புங்குடுதீவு குறிச்சுகாடு சந்தியில் அமைந்துள்ள தீவகம் பொது மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் இவ் ஊக்குவிப்பு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது . எமது மண்ணின் மைந்தர்களான . திவ்வியன் சண்முகநாதன் , சசி சண்முகநாதன் , சுரேஷ் செந்தில்நாதன் ஆகியோர் தலா 50000 என்ற அடிப்படையில் மேற்படி நற்காரியத்தினை மேற்கொள்வதற்கு உறுதுணையாக செயற்பட்டிருந்தனர் .
அண்மைக்காலங்களில் யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற இசை நிகழ்வுகளில் அதிகளவான பார்வையாளர்கள் கலந்துகொண்டிருக்கக்கூடிய இசை நிகழ்வாக கருதப்படுகின்ற இந்நிகழ்ச்சியானது புங்குடுதீவின் வரலாற்றில் ஓர் சிறப்பான சம்பவமாகும் .
அத்தோடு இங்கு எந்தவித கட்டணமும் அறவிடப்படாது சிறு வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையிலும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் செயலாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது .
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டிருந்த மாபெரும் இசைநிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக்குழுவினரான கனடா உறவுகளான திரு. சோம சச்சிதானந்தன் , கென் கிருபா , ந.உதயன் , கோபாலபிள்ளை தீபன் , அகிலன் முத்துக்குமாரசுவாமி , சமூகம் ஊடகம் ஆ. கிருபானந்தன் , திவ்வியன் கதிர்காமநாதன் , சசி சண்முகநாதன் , சுரேஷ் செந்தில்நாதன் மற்றும் சுவிஸ் சுரேஷ் செல்வரட்ணம் , புங்குடுதீவு மைந்தர்களான கருணாகரன் நாவலன் , கருணாகரன் குணாளன் ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும் .
புங்குடுதீவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்வும் , நற்பணி செயற்பாடுகளும் samugammedia புங்குடுதீவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்வும் , நற்பணி செயற்பாடுகளும் புங்குடுதீவு வாழ் மக்களை மனதளவில் மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. க. பொ.த. உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் தோற்றி 3 A சித்திகளை பெற்ற புங்குடுதீவை சேர்ந்த மேரி பவுஸ்ரினா எனும் மாணவியின் உயர்கற்கைக்கு உதவும் நோக்கில் புங்குடுதீவு உலகமையம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் முயற்சியினால் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ( 150 , 000 ) ரூபாய் வழங்கிவைக்கப்பட்டது . அண்மையில் புங்குடுதீவு குறிச்சுகாடு சந்தியில் அமைந்துள்ள தீவகம் பொது மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில் இவ் ஊக்குவிப்பு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது . எமது மண்ணின் மைந்தர்களான . திவ்வியன் சண்முகநாதன் , சசி சண்முகநாதன் , சுரேஷ் செந்தில்நாதன் ஆகியோர் தலா 50000 என்ற அடிப்படையில் மேற்படி நற்காரியத்தினை மேற்கொள்வதற்கு உறுதுணையாக செயற்பட்டிருந்தனர் . அண்மைக்காலங்களில் யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற இசை நிகழ்வுகளில் அதிகளவான பார்வையாளர்கள் கலந்துகொண்டிருக்கக்கூடிய இசை நிகழ்வாக கருதப்படுகின்ற இந்நிகழ்ச்சியானது புங்குடுதீவின் வரலாற்றில் ஓர் சிறப்பான சம்பவமாகும் . அத்தோடு இங்கு எந்தவித கட்டணமும் அறவிடப்படாது சிறு வியாபாரிகளை ஊக்குவிக்கும் வகையிலும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் செயலாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது . பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டிருந்த மாபெரும் இசைநிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக்குழுவினரான கனடா உறவுகளான திரு. சோம சச்சிதானந்தன் , கென் கிருபா , ந.உதயன் , கோபாலபிள்ளை தீபன் , அகிலன் முத்துக்குமாரசுவாமி , சமூகம் ஊடகம் ஆ. கிருபானந்தன் , திவ்வியன் கதிர்காமநாதன் , சசி சண்முகநாதன் , சுரேஷ் செந்தில்நாதன் மற்றும் சுவிஸ் சுரேஷ் செல்வரட்ணம் , புங்குடுதீவு மைந்தர்களான கருணாகரன் நாவலன் , கருணாகரன் குணாளன் ஆகியோருக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும் .