• Jun 30 2024

அடுத்த ஆட்சி மாற்றத்தோடுமலையகமும் மாற வேண்டும் - ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியுடனான சந்திப்பில் மனோ எம்.பி. தெரிவிப்பு

Chithra / Jun 28th 2024, 8:16 am
image

Advertisement

 

அடுத்து வரும் ஆட்சி மாற்றத்தை அடுத்து, இது ஒட்டு மொத்த பெருந்தோட்டத் துறையிலும் முறை மாற்றமாக பரிணமிக்க வேண்டும். அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் நாம் இன்று ஈடுபட்டுள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அந்திரேவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (27) கொழும்பில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. ஊடகங்களுக்குக் கருத்துக் கூறியபோது, 

"நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை உட்பட கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகலை ஆகிய மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள பெருந்தோட்ட பிரதேசங்களில், நவீன அடிமைத்துவ அம்சங்களுக்கு மத்தியில், மலையக சமூக குடும்பங்கள் வாழ்கின்றன.

இம்மக்களுக்கு பெருந்தோட்ட நிலங்களில், வதி விட காணி உரிமை, வாழ்வாதார காணி உரிமை உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றுத் தந்து அவர்களை இந்நாட்டின் முழுமையான பிரஜைகளாக்கும் கொள்கையை தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னெடுக்கின்றது.

இந்த விவகாரங்கள் தொடர்பான உள்நாட்டு அரசியல் சட்டவாக்க நடவடிக்கைளை தமிழ் முற்போக்குக் கூட்டணி மேற்கொள்ளும். அதற்கான பலம் மற்றும் தூரப்பார்வை எம்மிடம் உள்ளது. அடுத்த ஆட்சி மாற்றத்துக்கு உள்ளே சென்று திட்டங்களை வகுப்பதை விட, முன்கூட்டியே முன் தயாரிப்பு நடவடிக்கைகளில் தற்போது நாம் ஈடுபட்டுள்ளோம்.

இந்த விவகாரம் தொடர்பில் மலையக சிவில் சமூகத்துடனும் நாம் தற்போது கலந்துரையாடுகின்றோம்.

மக்கள் ஆணை கொண்ட அரசியல் பிரநிதிகளுடன் இணைந்து பணியாற்றக் கூடிய மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பற்றியும் நாம் வெகுவிரைவில் சர்வதேச சமூகத்துக்கு அறிவிப்போம்.

ஐ.நா. நிறுவனங்களான உணவு விவசாய நிறுவனம், யுனிசெப், உலக உணவு நிறுவனம் ஆகியவை ஊடாக எமக்குத் தொழில்நுட்ப, அபிவிருத்தி, ஒத்துழைப்புகளை வழங்க ஐ.நா. முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அந்திரேயிடம் முன்வைத்துள்ளோம்.

எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஆவன செய்வதாக உறுதி அளித்தார்." - என்றார்.


அடுத்த ஆட்சி மாற்றத்தோடுமலையகமும் மாற வேண்டும் - ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியுடனான சந்திப்பில் மனோ எம்.பி. தெரிவிப்பு  அடுத்து வரும் ஆட்சி மாற்றத்தை அடுத்து, இது ஒட்டு மொத்த பெருந்தோட்டத் துறையிலும் முறை மாற்றமாக பரிணமிக்க வேண்டும். அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் நாம் இன்று ஈடுபட்டுள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அந்திரேவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (27) கொழும்பில் நடைபெற்றது.இந்தச் சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. ஊடகங்களுக்குக் கருத்துக் கூறியபோது, "நுவரெலியா முதல் கொழும்பு அவிசாவளை உட்பட கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, குருநாகலை ஆகிய மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள பெருந்தோட்ட பிரதேசங்களில், நவீன அடிமைத்துவ அம்சங்களுக்கு மத்தியில், மலையக சமூக குடும்பங்கள் வாழ்கின்றன.இம்மக்களுக்கு பெருந்தோட்ட நிலங்களில், வதி விட காணி உரிமை, வாழ்வாதார காணி உரிமை உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றுத் தந்து அவர்களை இந்நாட்டின் முழுமையான பிரஜைகளாக்கும் கொள்கையை தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னெடுக்கின்றது.இந்த விவகாரங்கள் தொடர்பான உள்நாட்டு அரசியல் சட்டவாக்க நடவடிக்கைளை தமிழ் முற்போக்குக் கூட்டணி மேற்கொள்ளும். அதற்கான பலம் மற்றும் தூரப்பார்வை எம்மிடம் உள்ளது. அடுத்த ஆட்சி மாற்றத்துக்கு உள்ளே சென்று திட்டங்களை வகுப்பதை விட, முன்கூட்டியே முன் தயாரிப்பு நடவடிக்கைகளில் தற்போது நாம் ஈடுபட்டுள்ளோம்.இந்த விவகாரம் தொடர்பில் மலையக சிவில் சமூகத்துடனும் நாம் தற்போது கலந்துரையாடுகின்றோம்.மக்கள் ஆணை கொண்ட அரசியல் பிரநிதிகளுடன் இணைந்து பணியாற்றக் கூடிய மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பற்றியும் நாம் வெகுவிரைவில் சர்வதேச சமூகத்துக்கு அறிவிப்போம்.ஐ.நா. நிறுவனங்களான உணவு விவசாய நிறுவனம், யுனிசெப், உலக உணவு நிறுவனம் ஆகியவை ஊடாக எமக்குத் தொழில்நுட்ப, அபிவிருத்தி, ஒத்துழைப்புகளை வழங்க ஐ.நா. முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அந்திரேயிடம் முன்வைத்துள்ளோம்.எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஆவன செய்வதாக உறுதி அளித்தார்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement