வடக்கு மாகாணம் முன்னரைப்போன்று கல்வி, விளையாட்டு மற்றும் கலை ஆகிய துறைகளில் மீண்டும் உன்னத நிலையை அடைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலைமன்றங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆற்றுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (27) காலை யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் பாடசாலையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களுள் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆளுநர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது:
இன்றைய மாணவர்கள் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்துமாறு பெற்றோர்கள் அவர்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால், கல்விக்கு அப்பால் கலையும் விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது.
இளைய சமூகத்தினர் தமது ஓய்வு நேரங்களை கலை மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்களுக்குப் போதிய ஓய்வு நேரங்களை உருவாக்கிக் கொடுத்து, அவர்களை இத்துறைகளில் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் பாவனை மற்றும் கலாசார சீரழிவுகளில் இருந்து எமது இளைய சமூகத்தைப் பாதுகாக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களுள் ஒருவராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 14 கலைமன்றங்களுக்கு ஆற்றுகைப் பொருட்களும், 100 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு அனைத்து துறைகளிலும் உயர் நிலையை அடைய வேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் வடக்கு மாகாணம் முன்னரைப்போன்று கல்வி, விளையாட்டு மற்றும் கலை ஆகிய துறைகளில் மீண்டும் உன்னத நிலையை அடைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலைமன்றங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆற்றுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (27) காலை யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் பாடசாலையில் நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களுள் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆளுநர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது:இன்றைய மாணவர்கள் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்துமாறு பெற்றோர்கள் அவர்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால், கல்விக்கு அப்பால் கலையும் விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது.இளைய சமூகத்தினர் தமது ஓய்வு நேரங்களை கலை மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களுக்குப் போதிய ஓய்வு நேரங்களை உருவாக்கிக் கொடுத்து, அவர்களை இத்துறைகளில் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் பாவனை மற்றும் கலாசார சீரழிவுகளில் இருந்து எமது இளைய சமூகத்தைப் பாதுகாக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களுள் ஒருவராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் கலந்து சிறப்பித்தனர்.இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 14 கலைமன்றங்களுக்கு ஆற்றுகைப் பொருட்களும், 100 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.