• Oct 28 2024

நாடாளுமன்றத் தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 791 ஆக உயர்வு..!

Sharmi / Oct 28th 2024, 8:36 am
image

Advertisement

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 791 ஆக அதிகரித்துள்ளது.


அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில்  மாத்திரம் 75 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அவற்றில் 645 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 146 முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் அறிக்கையின் அடிப்படையில்  தேர்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 791 ஆக உயர்வு. எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 791 ஆக அதிகரித்துள்ளது.அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில்  மாத்திரம் 75 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அவற்றில் 645 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 146 முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை பெறப்பட்ட தேர்தல் முறைப்பாடுகளின் அறிக்கையின் அடிப்படையில்  தேர்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement