• Sep 20 2024

முதலிரவால் வந்த பிரச்சினை..!கண்ணீர் விடும் மனைவி..!கனடா வரை சென்ற புகார்..!samugammedia

Sharmi / Jul 6th 2023, 1:20 pm
image

Advertisement

கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு அழைப்பதாக மனைவி  மீது கணவரும், முதலிரவே நடத்தாமல் ஏமாற்றி வருவதாக கணவன் மீது மனைவியும் புகாரளித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கமலேஷ் (31) என்பவருக்கும், வேலூரை சேர்ந்த(28) இளம் பெண் ஒருவருக்கும்  இருவீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
   
அதன் பொழுது, அந்த பெண் வீட்டார் வரதட்சணையாக 35 சவரன் நகையும், 1 லட்சம் ரூபாயும் மற்றும் பாத்திரங்கள் போன்ற பொருட்களையும் வழங்கியுள்ளனர்..

இந்நிலையில், இருவருக்கும் முதலிரவிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட வேளை கமலேஷ், தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், கனடாவில் சென்று வைத்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

பின்னர், சில நாட்களில் விசா ஏற்பாடு செய்வதாக அந்த இளம் பெண்ணிடம் கூறிவிட்டு மனைவியின் 35 சவரன் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர் மட்டும் கனடாவுக்கு  சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து, அவரது மாமியார் மற்றும் மாமனார் 100 சவரன் நகையை  வரதட்சணையாக வாங்கி வருமாறும் தமது மகன் கனடாவில் 8 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்காகவும் பெரிய பெரிய வரன் வந்தும் அவற்றை புறக்கணித்தாகவும் கூறி சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையில், கமலேஷ் தனது தாயாருக்கும், மனைவிக்கும் ஒன்றாக விசா எடுத்து கனடாவுக்கு அழைத்துச் சென்ற போதிலும் அங்கும் முதலிரவு நடக்காமல் புறக்கணித்துள்ளதுடன் அளவுடன் சாப்பாடு வழங்கியும்  சித்தரவதையும் செய்துள்ளனர்.  

இந்நிலையில், குழந்தை பெற்றுக் கொள்வற்காக தனது மனைவி நிர்ப்பந்தம் செய்து தாம்பத்ய உறவுக்கு அழைப்பதாக கனடா நாட்டு பொலிஸாரிடம் கமலேஷ் புகாரளித்துள்ளதுள்ளார்.

அத்துடன், அந்த பெண்ணை தவிக்கவிட்டு மாமியாரும், கணவரும் வேறு இடத்திற்கு சென்ற நிலையில், பெரும் போராட்டத்திற்கு மத்தியில் அந்த பெண் கனடாவில் இருந்து  தாய் நாட்டிற்கு  திரும்பியுள்ளார்.

அதையடுத்து, தனது கணவரின் ஆண்மை குறைவை மறைத்து திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு காரணமான கணவர், அவரது பெற்றோர், பெரியப்பா, பெரியம்மா ஆகிய 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு அழைப்பதாக மனைவி  மீது கணவரும், முதலிரவே நடத்தாமல் ஏமாற்றி வருவதாக கணவன் மீது மனைவியும் புகார்களை அளித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலிரவால் வந்த பிரச்சினை.கண்ணீர் விடும் மனைவி.கனடா வரை சென்ற புகார்.samugammedia கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு அழைப்பதாக மனைவி  மீது கணவரும், முதலிரவே நடத்தாமல் ஏமாற்றி வருவதாக கணவன் மீது மனைவியும் புகாரளித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கமலேஷ் (31) என்பவருக்கும், வேலூரை சேர்ந்த(28) இளம் பெண் ஒருவருக்கும்  இருவீட்டார் சம்மதத்துடன் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.    அதன் பொழுது, அந்த பெண் வீட்டார் வரதட்சணையாக 35 சவரன் நகையும், 1 லட்சம் ரூபாயும் மற்றும் பாத்திரங்கள் போன்ற பொருட்களையும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் முதலிரவிற்கு ஏற்பாடு செய்யப்பட்ட வேளை கமலேஷ், தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், கனடாவில் சென்று வைத்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். பின்னர், சில நாட்களில் விசா ஏற்பாடு செய்வதாக அந்த இளம் பெண்ணிடம் கூறிவிட்டு மனைவியின் 35 சவரன் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர் மட்டும் கனடாவுக்கு  சென்றுள்ளார். அதனை தொடர்ந்து, அவரது மாமியார் மற்றும் மாமனார் 100 சவரன் நகையை  வரதட்சணையாக வாங்கி வருமாறும் தமது மகன் கனடாவில் 8 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்காகவும் பெரிய பெரிய வரன் வந்தும் அவற்றை புறக்கணித்தாகவும் கூறி சித்ரவதை செய்து வந்துள்ளனர். இதற்கிடையில், கமலேஷ் தனது தாயாருக்கும், மனைவிக்கும் ஒன்றாக விசா எடுத்து கனடாவுக்கு அழைத்துச் சென்ற போதிலும் அங்கும் முதலிரவு நடக்காமல் புறக்கணித்துள்ளதுடன் அளவுடன் சாப்பாடு வழங்கியும்  சித்தரவதையும் செய்துள்ளனர்.  இந்நிலையில், குழந்தை பெற்றுக் கொள்வற்காக தனது மனைவி நிர்ப்பந்தம் செய்து தாம்பத்ய உறவுக்கு அழைப்பதாக கனடா நாட்டு பொலிஸாரிடம் கமலேஷ் புகாரளித்துள்ளதுள்ளார். அத்துடன், அந்த பெண்ணை தவிக்கவிட்டு மாமியாரும், கணவரும் வேறு இடத்திற்கு சென்ற நிலையில், பெரும் போராட்டத்திற்கு மத்தியில் அந்த பெண் கனடாவில் இருந்து  தாய் நாட்டிற்கு  திரும்பியுள்ளார்.அதையடுத்து, தனது கணவரின் ஆண்மை குறைவை மறைத்து திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு காரணமான கணவர், அவரது பெற்றோர், பெரியப்பா, பெரியம்மா ஆகிய 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு அழைப்பதாக மனைவி  மீது கணவரும், முதலிரவே நடத்தாமல் ஏமாற்றி வருவதாக கணவன் மீது மனைவியும் புகார்களை அளித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement