உற்பத்தியை அதிகரித்து உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விவசாயிகளின் துயர் துடைக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம் எம் மஹ்தி அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (15) மாலை அவரால் வழங்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தை தேடுவதற்காக அடகு வைத்து, கடன் பட்டு விவசாயத்தை செய்கின்றார்கள்.
ஆகாயத்தை தொட்டு நிக்கும் பசளை விலை, களை நாசினி, கிருமிநாசினி விலைகள் உழவு இயந்திர, அறுவடை இயந்திர கூலிகள், சம்பள ஏற்றம் என்பவற்றால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகள் ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 120 ரூபா வரை செலவு செய்கின்றனர்.
அதே விவசாயிகள் ஒரு கிலோ நெல்லை 82 ரூபாவுக்கு விற்றால் எவ்வாறு அவர்களால் வாழ முடியும்.
எனவே விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நியாயமான விலை நிர்ணயத்தை செய்து நெற்களை கொள்வனவு செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மாறாக இதே நிலை நீடிக்குமாக இருந்தால் கோட்டா அரசாங்கத்தில் நடந்தது போன்று தொடர் போராட்டங்களும் ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகளும் விவசாயிகளினால் ஆரம்பிக்கப்படும் என்கின்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் துயர் துடைக்கப்பட வேண்டும்-கிண்ணியா நகர சபை தவிசாளர் தெரிவிப்பு உற்பத்தியை அதிகரித்து உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விவசாயிகளின் துயர் துடைக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம் எம் மஹ்தி அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று (15) மாலை அவரால் வழங்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.தொடர்ந்தும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தை தேடுவதற்காக அடகு வைத்து, கடன் பட்டு விவசாயத்தை செய்கின்றார்கள். ஆகாயத்தை தொட்டு நிக்கும் பசளை விலை, களை நாசினி, கிருமிநாசினி விலைகள் உழவு இயந்திர, அறுவடை இயந்திர கூலிகள், சம்பள ஏற்றம் என்பவற்றால் பாதிக்கப்படுகின்ற விவசாயிகள் ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 120 ரூபா வரை செலவு செய்கின்றனர். அதே விவசாயிகள் ஒரு கிலோ நெல்லை 82 ரூபாவுக்கு விற்றால் எவ்வாறு அவர்களால் வாழ முடியும். எனவே விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நியாயமான விலை நிர்ணயத்தை செய்து நெற்களை கொள்வனவு செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.மாறாக இதே நிலை நீடிக்குமாக இருந்தால் கோட்டா அரசாங்கத்தில் நடந்தது போன்று தொடர் போராட்டங்களும் ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகளும் விவசாயிகளினால் ஆரம்பிக்கப்படும் என்கின்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.