• Jun 28 2025

உயர்தர மாணவனின் முகத்தில் பலமுறை தாக்கிய ஆசிரியர்; பொலிஸ் விசாரணை தீவிரம்

Chithra / Jun 27th 2025, 8:28 am
image


கினிகத்தேனை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர், ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 

தாக்கப்பட்டதில் காயமடைந்த மாணவன் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம்  மாற்றப்பட்டுள்ளார். 

தான் இரண்டு மாதங்களாக பாடசாலைக்குச் செல்லாமல் பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றதாகவும் கடந்த திங்கட்கிழமை (23) பாடசாலைக்கு சென்ற போது, 

பாட ஆசிரியர் தனது குறிப்பேடுகளை கேட்ட நிலையில் தான்  பிரத்தியேக வகுப்புகளில் இருந்து எடுத்த குறிப்புகளைக் காட்டியதாகவும் இதன்போது, ​​ஆசிரியர் அந்த புத்தகத்தை கிழித்து முகத்தில் பலமுறை தாக்கியதாகவும் மாணவன் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு காது கேளாமை இருப்பதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில், கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில்  தாம் முறைப்பாட்டளித்துவிட்டு சிகிச்சைக்காக செல்வதற்கு முற்பட்டபோது, தமது பாடசாலையைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் முச்சக்கர வண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வந்து, தம்மை பலவந்தமாக பாடசாலைக்கு ஏற்றிச் சென்று முறைப்பாட்டை மீளப் பெற அழுத்தம் கொடுக்க முயன்றதாக குறித்த மாணவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, தாக்குதல் நடந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் தவறான அறிக்கையை வெளியிட்டதாக குறித்த மாணவனுக்கு எதிராகவும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் பொலிஸார் குறித்த மாணவனிடம்  வாக்குமூலம் பதிவு செய்து சம்பவம் குறித்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.


உயர்தர மாணவனின் முகத்தில் பலமுறை தாக்கிய ஆசிரியர்; பொலிஸ் விசாரணை தீவிரம் கினிகத்தேனை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர், ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. தாக்கப்பட்டதில் காயமடைந்த மாணவன் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு நேற்றையதினம்  மாற்றப்பட்டுள்ளார். தான் இரண்டு மாதங்களாக பாடசாலைக்குச் செல்லாமல் பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றதாகவும் கடந்த திங்கட்கிழமை (23) பாடசாலைக்கு சென்ற போது, பாட ஆசிரியர் தனது குறிப்பேடுகளை கேட்ட நிலையில் தான்  பிரத்தியேக வகுப்புகளில் இருந்து எடுத்த குறிப்புகளைக் காட்டியதாகவும் இதன்போது, ​​ஆசிரியர் அந்த புத்தகத்தை கிழித்து முகத்தில் பலமுறை தாக்கியதாகவும் மாணவன் கூறியுள்ளார்.மேலும் தனக்கு காது கேளாமை இருப்பதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில்  தாம் முறைப்பாட்டளித்துவிட்டு சிகிச்சைக்காக செல்வதற்கு முற்பட்டபோது, தமது பாடசாலையைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் முச்சக்கர வண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வந்து, தம்மை பலவந்தமாக பாடசாலைக்கு ஏற்றிச் சென்று முறைப்பாட்டை மீளப் பெற அழுத்தம் கொடுக்க முயன்றதாக குறித்த மாணவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தாக்குதல் நடந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் தவறான அறிக்கையை வெளியிட்டதாக குறித்த மாணவனுக்கு எதிராகவும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளார்.அத்தோடு நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் பொலிஸார் குறித்த மாணவனிடம்  வாக்குமூலம் பதிவு செய்து சம்பவம் குறித்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement