தனது மகனை காதலிப்பதை நிறுத்தக் கோரி காதலியின் தந்தையான 66 வயதுடைய நபரை கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
பிபில, ரதுபஸ்கெட்டிய, கல்கேலந்த வீதியில் உள்ள வீடொன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளான நபரின் மகள், சந்தேக நபரின் மகனுடன் காதல் உறவில் இருந்த நிலையில், அதை நிறுத்துமாறு சந்தேக நபர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்து கூறியுள்ளார்.
இதன்போது பெண்ணின் தாய் தந்தை வீட்டில் இருந்துள்ளதுடன் “அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என தந்தை கூறியுள்ளார்.
பின்னர், சுமார் அரை மணி நேரம் கழித்து, சந்தேக நபர் கத்தியை எடுத்து வந்து பெண்ணின் தந்தையை தாக்கியுள்ளதுடன், இதனால் அவரது கையின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த நபர், அவரது மனைவி மற்றும் பிரதேசவாசிகளால் சுவசெரிய ஆம்புலன்ஸ் மூலம் பிபில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், பிபில பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
காதலால் நடந்த விபரீதம்; கத்திக்குத்தில் இறங்கிய பெற்றோர் தனது மகனை காதலிப்பதை நிறுத்தக் கோரி காதலியின் தந்தையான 66 வயதுடைய நபரை கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.பிபில, ரதுபஸ்கெட்டிய, கல்கேலந்த வீதியில் உள்ள வீடொன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளான நபரின் மகள், சந்தேக நபரின் மகனுடன் காதல் உறவில் இருந்த நிலையில், அதை நிறுத்துமாறு சந்தேக நபர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்து கூறியுள்ளார்.இதன்போது பெண்ணின் தாய் தந்தை வீட்டில் இருந்துள்ளதுடன் “அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என தந்தை கூறியுள்ளார்.பின்னர், சுமார் அரை மணி நேரம் கழித்து, சந்தேக நபர் கத்தியை எடுத்து வந்து பெண்ணின் தந்தையை தாக்கியுள்ளதுடன், இதனால் அவரது கையின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.காயமடைந்த நபர், அவரது மனைவி மற்றும் பிரதேசவாசிகளால் சுவசெரிய ஆம்புலன்ஸ் மூலம் பிபில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், பிபில பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.