• Jun 26 2025

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும்! - பிரதி அமைச்சர் உறுதி

Chithra / Jun 26th 2025, 4:02 pm
image

 

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அதேபோன்று இந்த மாவட்டத்தின் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் கடற்றொழில், நீரில் வளத்துறை பிரதி அமைச்சர் ரத்னா கமகே தெரிவித்தார். 

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடற்றொழில், நீரில் வளத்துறை பிரதி அமைச்சர் ரத்னா கமகே இன்று  திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.

திருகோணமலை மாவட்ட, மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மீனவர்களுடனான கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஹேமந்தகுமார் தலைமையில், மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இங்கே மீனவர்களால், முன்மொழியப்பட்ட பிரச்சினைகளை, அரசாங்கம் கவனத்தில் எடுக்கும் என்றும், உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை இனம் கண்டு, அவற்றுக்கான பொருத்தமான தீர்வுகளை விரைவில் நாங்கள் முன்வைப்போம்.

சிறிய பிரச்சினைகளை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் முன்வைத்து, சாதகமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மேலும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும் உரிய கவனம் எடுத்து, அதனை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில், திருகோணமலை துறைமுகத்துக்கு வெளியில், சிறு இயந்திரம் பொருத்தப்பட்ட வள்ளங்களில் சென்று மீன் பிடிப்பதில் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், சுருக்குவலை போட்டு மீன் பிடிப்பதில் ஏற்பட்டிருக்கின்ற தடைகள், இரவு நேரங்களில் அட்டை தொழில் செய்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, மீனவர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும், சீனக்குடா கொட்பே மீன்பிடி துறைமுக அபிவிருத்தி தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் தொடர்பாகவும், வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாகவும், கரவலை மீனவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.

மீனவர்கள் எரிபொருட்களை இலகுவாக பெற்றுக் கொள்வதற்காக, எரிபொருள் நிலையங்களை பொருத்தமான பிரதேசங்களில் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.


திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் - பிரதி அமைச்சர் உறுதி  திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அதேபோன்று இந்த மாவட்டத்தின் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் கடற்றொழில், நீரில் வளத்துறை பிரதி அமைச்சர் ரத்னா கமகே தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடற்றொழில், நீரில் வளத்துறை பிரதி அமைச்சர் ரத்னா கமகே இன்று  திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.திருகோணமலை மாவட்ட, மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மீனவர்களுடனான கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஹேமந்தகுமார் தலைமையில், மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,இங்கே மீனவர்களால், முன்மொழியப்பட்ட பிரச்சினைகளை, அரசாங்கம் கவனத்தில் எடுக்கும் என்றும், உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளை இனம் கண்டு, அவற்றுக்கான பொருத்தமான தீர்வுகளை விரைவில் நாங்கள் முன்வைப்போம்.சிறிய பிரச்சினைகளை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் முன்வைத்து, சாதகமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மேலும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும் உரிய கவனம் எடுத்து, அதனை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.இந்த கலந்துரையாடலில், திருகோணமலை துறைமுகத்துக்கு வெளியில், சிறு இயந்திரம் பொருத்தப்பட்ட வள்ளங்களில் சென்று மீன் பிடிப்பதில் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், சுருக்குவலை போட்டு மீன் பிடிப்பதில் ஏற்பட்டிருக்கின்ற தடைகள், இரவு நேரங்களில் அட்டை தொழில் செய்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, மீனவர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.மேலும், சீனக்குடா கொட்பே மீன்பிடி துறைமுக அபிவிருத்தி தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் தொடர்பாகவும், வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாகவும், கரவலை மீனவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.மீனவர்கள் எரிபொருட்களை இலகுவாக பெற்றுக் கொள்வதற்காக, எரிபொருள் நிலையங்களை பொருத்தமான பிரதேசங்களில் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement