• Jul 02 2025

கட்டுப்பாட்டையிழந்த வாகனம் நெல்மூடைகளுடன் கவிழ்ந்தது!

shanuja / Jul 1st 2025, 1:17 pm
image

வவுனியா பம்மைமடு பகுதியில் நெல்மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனமொன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. 

 

மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த வாகனமே  இன்று (1) காலை  விபத்துக்குள்ளாகியது. 


நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் பம்பைமடு இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் வீதியின் மறுபக்கம்  திரும்ப  முற்பட்ட  வேளை சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.


விபத்தில் வாகனத்திலிருந்த நெல் மூடைகள் வீதியில் சிதறியதுடன் வாகனமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 


இந்த விபத்துச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பூவரசங்குளம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டுப்பாட்டையிழந்த வாகனம் நெல்மூடைகளுடன் கவிழ்ந்தது வவுனியா பம்மைமடு பகுதியில் நெல்மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனமொன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.  மன்னார் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த வாகனமே  இன்று (1) காலை  விபத்துக்குள்ளாகியது. நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் பம்பைமடு இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் வீதியின் மறுபக்கம்  திரும்ப  முற்பட்ட  வேளை சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் வாகனத்திலிருந்த நெல் மூடைகள் வீதியில் சிதறியதுடன் வாகனமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இந்த விபத்துச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பூவரசங்குளம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement