• Sep 19 2024

பரீட்சையில் சித்தியடைந்ததை கொண்டாடிய இளைஞன் பரிதாப மரணம்..!

Sharmi / Aug 5th 2024, 2:29 pm
image

Advertisement

கொரிய மொழி பரீட்சைக்கு தோற்றிய இளைஞர் ஒருவர் குறித்த பரீட்சையில் சித்தியடைந்ததை கொண்டாடுவதற்காக பலாங்கொடை, சமனலவெவ நீர்த்தேக்கத்திற்கு நீராடச்சென்ற நிலையில் அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த துயர சம்பவம் நேற்று(4) மாலை இடம்பெற்றுள்ளது. 

இச் சம்பவத்தில் வென்னப்புவ கொலிஞ்சாடிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் ஆசிரியர் மற்றும் சில இளைஞர்களுடன் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீராடியுள்ளார்.

இதன்போது, குறித்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சமனலவெவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.   

பரீட்சையில் சித்தியடைந்ததை கொண்டாடிய இளைஞன் பரிதாப மரணம். கொரிய மொழி பரீட்சைக்கு தோற்றிய இளைஞர் ஒருவர் குறித்த பரீட்சையில் சித்தியடைந்ததை கொண்டாடுவதற்காக பலாங்கொடை, சமனலவெவ நீர்த்தேக்கத்திற்கு நீராடச்சென்ற நிலையில் அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த துயர சம்பவம் நேற்று(4) மாலை இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் வென்னப்புவ கொலிஞ்சாடிய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் ஆசிரியர் மற்றும் சில இளைஞர்களுடன் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீராடியுள்ளார்.இதன்போது, குறித்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சமனலவெவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.   

Advertisement

Advertisement

Advertisement