• Sep 21 2024

தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளுக்கு எதிரானவர்கள் - தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்.!

Tamil nila / Feb 2nd 2023, 12:32 pm
image

Advertisement

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது தமிழ் மக்களின் தேசிய போராட்டங்களுக்கு எதிராகவே எப்போதும் செயற்படுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் ஊடகவியலாளர் எமுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாம் தனித்து நிற்பதன் ஊடாக புதிய சாதனைகளை படைக்க முடியும் என்று முயற்சிப்பதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


சுதந்திர தினத்துக்கு எதிரான பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளமுடியாதெ மறுதலிப்பது ஆரோக்கியமான விடையமாக இருக்காது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளுக்கு மற்றும் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிரான செயற்பாடாடாவே தாம் இதனை பார்ப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்

தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளுக்கு எதிரானவர்கள் - தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது தமிழ் மக்களின் தேசிய போராட்டங்களுக்கு எதிராகவே எப்போதும் செயற்படுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் ஊடகவியலாளர் எமுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாம் தனித்து நிற்பதன் ஊடாக புதிய சாதனைகளை படைக்க முடியும் என்று முயற்சிப்பதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர தினத்துக்கு எதிரான பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளமுடியாதெ மறுதலிப்பது ஆரோக்கியமான விடையமாக இருக்காது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளுக்கு மற்றும் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிரான செயற்பாடாடாவே தாம் இதனை பார்ப்பதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement

Advertisement