• Sep 19 2024

எதிர்வரும் தேர்தலில் திருடர்கள் குழுவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை...! மனோ எம்.பி உறுதி..!

Sharmi / Aug 1st 2024, 12:11 pm
image

Advertisement

எதிர்வரும் தேர்தலில் மக்கள் கவனமாக சிந்தித்து சரியான வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தான் ஒருபோதும் திருடர்கள் குழுவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சுமார் 20 வருடங்களாக நட்புறவுடன் பழகியதன் காரணமாக அவரை தமக்கு நன்கு தெரியும்.

கடந்த காலங்களில் புதிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமை வருத்தமளிக்கிறது.

அதேவேளை, எதிர்வரும் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் போது மிகவும் கவனமாக சிந்தித்து சரியான வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

எனவே தான் ஒருபோதும் திருடர்கள் குழுவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் திருடர்கள் குழுவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை. மனோ எம்.பி உறுதி. எதிர்வரும் தேர்தலில் மக்கள் கவனமாக சிந்தித்து சரியான வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் தான் ஒருபோதும் திருடர்கள் குழுவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சுமார் 20 வருடங்களாக நட்புறவுடன் பழகியதன் காரணமாக அவரை தமக்கு நன்கு தெரியும்.கடந்த காலங்களில் புதிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமை வருத்தமளிக்கிறது.அதேவேளை, எதிர்வரும் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் போது மிகவும் கவனமாக சிந்தித்து சரியான வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.எனவே தான் ஒருபோதும் திருடர்கள் குழுவிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement