நால்லாட்சி காலத்தில், எரிபொருட்கள் 2 ரூபாவினால் அதிகரித்த போது துவிச்சக்கரவண்டியில் நாடாளுமன்ற வந்தவர்கள் தற்போதை விலையில் நாடாளுமன்றத்திற்கு தவண்டா பிரண்டா உருண்டா வரப்போகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்கின்ற காரணத்தினால் மின்சார கட்டணத்தை அதிகரித்தாலும் பரவாயில்லை என மக்கள் தெரிவிப்பதாப பொய்யான கருத்தை அரசியல்வாதிகள் தெரிவிப்பதாகவும் இம்ரான் மஹ்ரூப் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு மக்கள் கூறுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையில், இன்று விவாசாயத்துறை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 100 ரூபாவிற்கு நெல்லை கொள்வனவு செய்வதாக தொலைக்காட்சியில் ஜனாதிபதி தெரிவித்திரந்தாகவும்
ஆனால், அந்த பிரதேசங்களில் 66 ரூபாவிற்கே நெல் கொள்வனவு இடம்பெறுவதாக இம்ரான் மஹ்ரூப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாத காரணத்தினால் மூடப்படுவதாகவும் கிண்ணியா மூதூர் குச்சவெளி புல்மோட்டை ஆகிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நோயாளிகள் சென்றால் அவர்களை உடனடியாக திருகோணமலைக்கு அனுப்புகின்ற ஒரு நிலையே காணப்படுவதாக இம்ரான் மஹ்ரூப் குறிப்பிட்டிருந்தார்.
எரிபொருளின் விலையை 2ரூபாவால் அதிகரித்த போது சைக்கிளில் வந்தவர்கள் இன்று, பிரண்டா, உருண்டா வரபோகிறார்கள் - எம்.பி SamugamMedia நால்லாட்சி காலத்தில், எரிபொருட்கள் 2 ரூபாவினால் அதிகரித்த போது துவிச்சக்கரவண்டியில் நாடாளுமன்ற வந்தவர்கள் தற்போதை விலையில் நாடாளுமன்றத்திற்கு தவண்டா பிரண்டா உருண்டா வரப்போகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்கின்ற காரணத்தினால் மின்சார கட்டணத்தை அதிகரித்தாலும் பரவாயில்லை என மக்கள் தெரிவிப்பதாப பொய்யான கருத்தை அரசியல்வாதிகள் தெரிவிப்பதாகவும் இம்ரான் மஹ்ரூப் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு மக்கள் கூறுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இலங்கையில், இன்று விவாசாயத்துறை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 100 ரூபாவிற்கு நெல்லை கொள்வனவு செய்வதாக தொலைக்காட்சியில் ஜனாதிபதி தெரிவித்திரந்தாகவும் ஆனால், அந்த பிரதேசங்களில் 66 ரூபாவிற்கே நெல் கொள்வனவு இடம்பெறுவதாக இம்ரான் மஹ்ரூப் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் வைத்தியசாலைகளில் மருந்துகள் இல்லாத காரணத்தினால் மூடப்படுவதாகவும் கிண்ணியா மூதூர் குச்சவெளி புல்மோட்டை ஆகிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நோயாளிகள் சென்றால் அவர்களை உடனடியாக திருகோணமலைக்கு அனுப்புகின்ற ஒரு நிலையே காணப்படுவதாக இம்ரான் மஹ்ரூப் குறிப்பிட்டிருந்தார்.