• Apr 08 2025

விபச்சார விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார் - இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது

Chithra / Apr 7th 2025, 11:58 am
image

 கண்டி - தவுலகல பொலிஸ் பிரிவின் கடலாதெனிய பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதியான்றில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த விடுதியின் நிர்வாகத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரும், தகாத செயலில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த 2 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலிமத்தலாவையைச் சேர்ந்த 68 வயதுடையவர் என்றும், 

பெண்கள் 35 மற்றும் 48 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் தெவனகல மற்றும் முருத்தலாவையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

விபச்சார விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார் - இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது  கண்டி - தவுலகல பொலிஸ் பிரிவின் கடலாதெனிய பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதியான்றில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இந்த விடுதியின் நிர்வாகத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரும், தகாத செயலில் ஈடுபடுவதற்காக தங்கியிருந்த 2 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலிமத்தலாவையைச் சேர்ந்த 68 வயதுடையவர் என்றும், பெண்கள் 35 மற்றும் 48 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் தெவனகல மற்றும் முருத்தலாவையை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement