• Sep 29 2024

ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவோம்- ரிஷாட் திட்டவட்டம்..!

Sharmi / Sep 28th 2024, 10:01 am
image

Advertisement

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடும் என அக் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிண்ணியா விசன் மண்டபத்தில் நேற்றையதினம்(27)மாலை இடம்பெற்ற மாவட்ட மத்திய குழு கூட்டத்தின் போதே ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். 

திருகோணமலை மாவட்டத்தில் இம் முறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும்.

அதேவேளை, அம்பாறை, புத்தளம் மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என உயர் பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நாளை அம்பாறை மாவட்ட மத்திய குழுவை கூட்டி தீர்மானங்களை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

குறித்த மத்திய குழு கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப், உயர் பீட உறுப்பினர் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவோம்- ரிஷாட் திட்டவட்டம். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடும் என அக் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.கிண்ணியா விசன் மண்டபத்தில் நேற்றையதினம்(27)மாலை இடம்பெற்ற மாவட்ட மத்திய குழு கூட்டத்தின் போதே ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் இம் முறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும்.அதேவேளை, அம்பாறை, புத்தளம் மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என உயர் பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.நாளை அம்பாறை மாவட்ட மத்திய குழுவை கூட்டி தீர்மானங்களை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.குறித்த மத்திய குழு கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப், உயர் பீட உறுப்பினர் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement